Skip to main content

தமிழகத்தில் 82 ஆயிரம் பேருக்கு கரோனா! -இன்றும் மட்டும் 4 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!

Published on 28/06/2020 | Edited on 29/06/2020

 

'Corona' hits 82 thousand people in Tamil Nadu - only 4 thousand close to today !!!

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் 30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,992 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை  மொத்தமாக 82,275 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 35,656 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 1,443 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,537. சென்னையில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இன்று 54 பேர் உயிரிழந்துள்ளனர்.  அரசு மருத்துவமனைகளில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் இன்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,079 அதிகரித்துள்ளது.

 

'Corona' hits 82 thousand people in Tamil Nadu - only 4 thousand close to today !!!


இந்நிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் 248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 நாட்களில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. தற்பொழுது அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது. தற்போது வரை 1,435 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு என்பது 5,073 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் அதிகபட்சமாக 75 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 2,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பூந்தமல்லியில் 21 பேருக்கும், ஆவடியில் 18 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,520 அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 2,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் திருவள்ளூரில் செங்கல்பட்டிற்கு அடுத்தபடியாக கரோனாவிற்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அதேபோல் வேலூரில் இன்று ஒரே நாளில் 126 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வேலூரில்11 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 1,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 357 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

 

ராமநாதபுரத்தில் இன்று ஒரே நாளில் 63 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவமனையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு 468 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நான்கு பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்று 63 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டுள்ளதால் ராமநாதபுரத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 711 ஆக அதிகரித்துள்ளது.

 

அதேபோல் தேனியில் ஒரே நாளில் 58 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தேனியில் 2 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மொத்த பாதிப்பு 571 ஆக அதிகரித்துள்ளது.

 

அதேபோல் திருவாரூரில் மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்னிலம், பேரளம்,  திருத்துறைப்பூண்டி காவல் நிலைய காவலர்கள்  5 பேர்  உட்பட மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.