Skip to main content

கரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுமாற்றமா?

Published on 03/04/2020 | Edited on 04/04/2020

 

அரிபாரதிகரோனாவின் ஆபத்தை உணர்ந்து பலர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பாக உள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் சில முரட்டுமனிதர்கள் வரும் ஆபத்தை உணராமல் கட்டுப்பாடுகளை மீறி, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுற்றித்திரிகிறார்கள்.

 

இந்த நோயை கட்டுப்படுத்த ஆங்கில மருத்துவத்தில் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. பல மாடிக்கட்டிடங்கள் கொண்ட ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இப்படிப்பட்டவர்கள் உலக அளவில் இருந்தும் தற்போதைய கரோனா உட்பட 50 நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்கிறார்கள். 

 

மக்களை மிரட்டும் கொரோனா அயல்நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமே நம் நாட்டு மக்களுக்கு பரவி வருகிறது. சீனாவில் இன்நோயின் தாக்கம் பிப்ரவரி முதல் தீவிரமாக பரவியது. இந்தியா மட்டும் கடந்த 15ஆம் தேதி  தடுப்பு நடவடிக்கைகளில இறங்கியது. சீனாவில் பரவிய பிப்ரவரி மாத காலகட்டத்திலேயே நமது இந்தியவிலும் அயல் நாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அப்போதே தனிமைபடுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம். 

 

ப்

 

விமானத்தில் வந்தவர்களை பெயரளவிற்கு பரிசோதனை செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் கொரோனா தொற்று இருந்து அது தீவிரமாகி அவர்களுடன் இருந்து மற்றவர்களுக்கும் பரவிவருகிறது என்பது அனைவரும் அரிந்ததே.

பொதுவாக டெங்கு, மலேரியா, பறவைகாய்ச்சல், பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா, போன்ற நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற பெரிதும் உதவியது சித்த மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலவேம்பு கசாயம். அதேபோல் இப்போதும் சித்தமருத்துவ நிபுணர்கள் கபசுரக்குடிநீர், வாதசுரநீர் ஆகிய இரண்டு மருந்துகளும் கரோனாவை கட்டுப்படுத்தும் என கூறிவருகிறார்கள். இதை பயன்படுத்த முதலில் அரசுகள் தயக்கம் காட்டியது.  இப்போது பிரதமர் மோடி சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கருத்தைக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. .

 

போர்க்கால அடிப்படையில் மாற்று மருந்து கண்டுபிடிப்பது அல்லது மாற்றுவழி கண்டறிவது மிகமிக அவசியம் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணரவேண்டும்.

 

ஒருவருக்கொருவர் நோய்தொற்று இருக்கிறதோ இல்லையோ விலகி இருக்கவேண்டும். கும்பல் கூடுவதை தவிர்க்க வேண்டும்.  முன்னெச்சரிக்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். 

 

மக்களும் இந்த நோயினால் மற்ற நாடுகளில் நடக்கும் சம்பவங்களை ஊடகங்கள் மூலம் பார்த்து வருகிறார்கள்.  அதை உணர்ந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் பாதுகாத்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
                                                

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.