Skip to main content

சர்ச்சையாகியுள்ள எம்.எல்.ஏவின் 'காலணி'... என்ன நடந்தது ?

Published on 05/07/2020 | Edited on 06/07/2020

 

The controversial MLA's shoes ... what happened?

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்தில் உள்ள அரங்கல்துருகம் பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள துருகம் காப்புக்காடுகள் வரும் கானாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஜீன் 30ந்தேதி இரவு பெய்த கனமழையால் அந்தத் தடுப்பணை உடைந்துவிட்டது. அதுப்பற்றி அந்தக் கிராம மக்கள் தங்களது ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ, பேரணாம்பட்டு தெற்கு ஒ.செ என்கிற முறையில் தி.மு.க.-வை சேர்ந்த வில்வநாதனுக்குத் தகவல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜூலை 1 ந் தேதி காலையே எம்.எல்.ஏ. வில்வநாதன் அந்தக் கிராமத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.

கானாற்றில் இறங்கி தடுப்பணை உடைந்ததை பார்வையிட்டவர், அங்கு வந்திருந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி கழக செயலாளர் சங்கர் என்பவரிடம், தன் செருப்பை எடுத்து வரச்சொன்னாராம். அவரும் எடுத்துவந்துள்ளார், இந்த வீடியோ, போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பட்டியலின சாதியைச் சேர்ந்தவரை, உயர் சாதி, எம்.எல்.ஏ என்கிற திமிரோடு செருப்பு எடுத்துவரவைத்தார் எனத் தகவல் பரவி பரபரப்பாகியுள்ளது.

திமுகவின் மா.செ, எம்.பி, எம்.எல்.ஏக்கள் எங்கு சென்றாலும் அந்தத் தொகுதி, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் பணியைச் செய்கின்றனர். ஆம்பூர் தொகுதியில் அந்த அணியினருடன் எம்.எல்.ஏவுக்கு முரண்பாடு ஆகியுள்ளது. இதனால் அவர்கள் வருவதில்லை. அந்த வேலையை தி.மு.க.-வின் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள அனிதாவின் கணவரும், வெங்கடசமுத்திரம் ஊராட்சி கழக செயலாளருமான சங்கர் தான் செய்துவருகிறார். அவர் தான் எம்.எல்.ஏவின் செருப்பைக் கையில் எடுத்து சென்றவர். எம்.எல்.ஏ எடுத்து வரச்சொன்னாரா அல்லது இவரே எடுத்துச் சென்றாரா என்பது தெரியவில்லை என்றார்கள்.

 

The controversial MLA's shoes ... what happened?


இதுபற்றி ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பொய்யான தகவலை பரப்பராங்க. நான் யாரையும் செருப்பு எடுத்துக்கிட்டு வரச்சொல்லவில்லை" என்றார்.

செருப்பைச் சுமந்த சங்கர் நம்மிடம், "15 வருடமா அவருடன் இருக்கேன். என் மனைவி கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளரா இருக்காங்க. நான் எப்போதும் எம்.எல்.ஏவுடன் இருப்பேன். இருவரும் வேறு வேறு சாதியாக இருந்தாலும் அவர் சாதி பார்த்ததில்லை. அவர் உடைந்த தடுப்பணையை பார்வையிட காரில் இருந்து இறங்கி முன்னாடி போய்ட்டார். 25 மீட்டர் தள்ளி நான் பின்னாடி போனான். போகும்போது, ஒரு இடத்தில் எம்.எல்.ஏ.-வோட செருப்பு இருந்தது. எதுக்காக இவர் செருப்ப கழட்டி விட்டுட்டுப் போனார். சுகர் பேஷன்டான இவர் கால்ல கல்லு பட்டு காயம்மான பிரச்சனையாச்சேன்னு நான் தான் செருப்ப எடுத்துக்கிட்டு போனான். அதைப் பார்த்தவர் செருப்ப எதுக்கு தூக்கிட்டு வர்றன்னு சொல்லி என்னை சத்தம் போட்டார். இதான் நடந்தது. இது தெரியாம எனக்கு வேண்டாதவங்க யாரோ வீடியோ எடுத்து போட்டிருக்காங்க என்றார்.

இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.