Skip to main content

'தொடரும் ரவுடி ரீல்ஸ் கலாச்சாரம்...' - சட்டக் கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது!

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

'Continuing reels rowdy culture...'-Two arrested including a law college student!

 

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ் வேனில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸாக வெளியிட்ட சட்டக்கல்லூரி மாணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு பகுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சி.எஸ்.எஃப் வீரர்கள் தங்கி வருகின்றனர். அவர்களை புதுப்பேட்டை ஆயுதப்படை வாகன ஓட்டுநராக பணிபுரியும் நவீன்குமார் என்பவர், தினமும் உயர்நீதிமன்றம் அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் துறைமுக குடியிருப்பு பகுதியில் வாகனத்தை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

இந்நிலையில், இளைஞர்கள் சிலர் அதனைப் பயன்படுத்திக் கொண்டு ரவுடிகள் போன்று வேடமிட்டுக்கொண்டு அங்கிருந்த காவல் வாகனத்திலிருந்து இறங்கி வருவது போலவும், அங்கிருந்து காசிமேடு சென்று ஒரு கும்பலை வெட்டி கொலை செய்துவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து வருவது போலவும் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாவில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல் வாகன ஓட்டுநர் நவீன்குமார் காவல் நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து, அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் விக்னேஷ் மற்றும் மணலி புதுநகரைச் சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்து தற்பொழுது சிறையிலடைத்துள்ளனர்.

 

இதற்கு முன்பு டிக் டாக் புழக்கத்தில் இருந்த காலத்திலேயே இதுபோல் காவல்நிலையத்தில் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்திருந்தனர். பலமுறை இது தொடர்பாக எச்சரிக்கைகள் கொடுத்தும் தற்பொழுது இன்ஸ்டா ரீல்ஸ் வரை இத்தகைய சம்பவங்கள் தொடர்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.