Skip to main content

தொடரும் ஆடு திருட்டுகள்... அலறும் விவசாயிகள்...

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

Continued theft of goats... Screaming farmers...

 

 

தமிழகம் முழுவதும் ஆடுகள் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆடு திருடர்களை பிடிக்கச் சென்ற போலீசார் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து சில மாதங்கள் கடுமையான ரோந்துப் பணிகளும், தனிப்படைகளும் அமைக்கப்பட்டு திருடப்பட்ட ஆடுகள் மீட்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் ஆடுகள் திருட்டு தலைதூக்கி இருக்கிறது.

 

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியில் மொத்தமாக திருடப்பட்ட ஆடுகளை மீட்க முடியாமல் போலீசார் திணறிய போது, அதேகும்பல் மீண்டும் ஆடு திருட இடம் பார்க்க வந்த போது பிடிபட்டது. அவர்களிடம் இருந்து ஆடுகளும் மீட்கப்பட்டன. வடகாடு காவல் சரகம் நெடுவாசல் மேற்கு அரணமனைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வீட்டில் நின்ற 2 ஆடுகள், திருமேனி என்பவர் வீட்டில் 2 ஆடுகள் என 4 ஆடுகள் வெள்ளிக்கிழமை இரவு காணாமல் போனது. அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் ஒரு ஆடு நேற்று இரவு காணாமல் போனது. இதுகுறித்து 3 பேரும் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

 

கடந்த சில வாரங்களில் வடகாடு பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளன. அதேபோல் கீரமங்கலம் காவல் சரகம் குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ராஜகுமாரி வளர்த்த 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கிராமப்புற ஏழை விவசாயிகளின் வாழ்வாதரத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள் தொடர்ந்து திருடப்படுவதால் கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் தனிப்படைகள் அமைத்து ஆடு திருடர்களை கண்டுபிடித்தால் மட்டுமே ஆடு திருட்டுகளை தடுக்க முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.