Skip to main content

நடுக்கடலில் தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல்; பீதியில் தமிழக மீனவர்கள்...!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021
Continued attacks on fishermen in the Mediterranean Tamil Nadu fishermen in panic

 

நடுக்கடலில் கொடூர ஆயுதங்களை கொண்டு மீனவர்களை மிரட்டுவதும், தாக்குவதும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. நாகை மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்திமுனைகொண்டு சரமாரி தாக்குதல் நடத்தியதோடு, தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி இழுத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

 

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். கடந்த 21ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கே 15 நாட்டிகள் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு திசைகளில் இருந்து அதிவேக இரண்டு படகுகள் வந்தன, அந்த படகில் வந்த 15 இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நாகை மீனவர்களின் மீது சரமாரியாக தாக்கினர். அதோடு மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி படகுகளில் நாகை மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிக்க முயன்றுள்ளனர்.

 

Continued attacks on fishermen in the Mediterranean Tamil Nadu fishermen in panic

 

அதனை நாகை மீனவர்கள் தடுக்க பெரும்முயற்சி செய்துள்ளனர், ஆனாலும் கூர்மையான தூண்டில் கம்பிகளை உடலை மாட்டி சித்தரவதை செய்து தண்ணீரில் தள்ளிவிட்டுவிட்டு கொள்ளை சம்பவத்தை அறங்கேற்றியுள்ளனர். படகில் இருந்து வலை, வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி மற்றும் 3 லட்சம் மதிப்பிலான மீன்கள் என அனைத்தையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றிருக்கின்றனர். படுகாயங்களோடு சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளித்து அதிரச்சியடைந்த நாகை மீனவர்களை. அவ்வழியே வந்த நாகையைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பார்த்துவிட்டு கடலில் தத்தளித்த செருதூர் மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளான கண்ணன், முருகன் உள்ளிட்ட 6 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

 

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வெள்ளப்பள்ளம் மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர், அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்குள் செருதூர் கிராம மீனவர்களை தாக்கப்ப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.