Skip to main content

கட்சி அலுவலகத்தை கே.எஸ்.அழகிரி விற்றார் என குற்றச்சாட்டு... குற்றம்சாட்டியவர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம்...!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி அலுவலகத்தை விற்பனை செய்தார் என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்னாள் தெற்கு மாவட்டத் தலைவர் விஜய சுந்தரம் பொதுவெளி்யில் வைத்தார்.

 

Congress leader KS Alagiri issue - former district leader removal  party

 



இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் மணிரத்தினம், கடலூர் தெற்கு மாவட்ட மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது, "கடலூர் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்சி அலுவலகம் உள்ளது. இதில் கடலூரில் உள்ள அலுவலகத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. விருத்தாச்சலம் அலுவலகம் கட்சியின் கட்டுபாட்டில் உள்ளது. மங்கலம்பேட்டையில் உள்ள அலுவலகத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதற்கு கட்சியின் சொத்துபாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு அதனை நீதிமன்ற நடவடிக்கையின் பேரில் மீட்கும் பணிகள் நடைபெற்றது. அதேபோல் தமிகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்தநிலையில் மங்கலம் பேட்டையில் உள்ள கட்சியின் அலுவலகத்தை நீதிமன்ற நடவடிக்கையின் பேரில் கட்சி தற்போது மீட்டுள்ளது. அதன் மீது பொய்யான பத்திரபதிவினை விருத்தாச்சலம் சார் ஆட்சியர் தள்ளுபடி செய்துள்ளார். சம்பவம் இப்படி இருக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தெற்கு மாவட்டத் தலைவர் விஜய சுந்தரம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மங்கலம்பேட்டையில் உள்ள அலுவலகத்தை ரூ. 20 லட்சத்திற்கு கூட்டுசேர்ந்து விற்றதாக பொய்யான குற்றசாட்டை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். 

அவர் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார். எனவே அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க கடலூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு பரிந்துரை செய்கிறோம்" என்று மணிரத்தினம் கூறினார்.

இதனைதொடர்ந்து பேசிய நகர் பெரியசாமி, " விஜய சுந்தரம் தொடர்ந்து கட்சிக்கும் மாநில தலைவர் மீதும் பொய்யான குற்றச்சாட்டை கூறி கட்சியின் மீது அவபெயரை ஏற்படுத்தி வருகிறார். எனவே அவரை கட்சியின் இடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்குவதாக" தெரிவித்தார்.
 
  

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.