Skip to main content

திருச்சி கோவிட் வார்டில் பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்! மருத்துவர்கள் குமுறல்...

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
Trichy

 

 

திருச்சி கோவிட் வார்டில் பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

திருச்சி அரசு மருத்துவமனையில் 180 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களோடு 17 பிரிவுகளில் 80க்கும் அதிகமான மருத்துவ பிரிவை சாராத மருத்துவர்கள் பணி செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் 5 நாட்கள் கரோனா சிகிச்சை பணியில் இருந்துவிட்டு அடுத்த 5 நாட்கள் ஓட்டல்களில் தனிப்படுத்தப்பட்டு அடுத்த 5 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பிறகு கோவிட் பரிசோதனை செய்து முடிவுகள் வந்த பிறகே மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று விதியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் குறைந்தளவு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை காரணம் காட்டி, இந்த விதிகள் எதையுமே பின்பற்றுவதில்லை.

 

பணி ஒதுக்கீடு செய்வதில்கூட பாரபட்சம் காட்டுகிறார்கள். இதுகுறித்து மருத்துமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, மருத்துமனையில் உயர்பதவியில் உள்ளவர்களின் உறவினர்கள் பலர் மருத்துவர்களாக இதே அரசு மருத்துமனையில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்வது இல்லை. அமைச்சரின் சிபாரிசில் பணியில் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு இதுவரை கோவிட் வார்டில் பணி அமர்த்தவே இல்லை.

 

மருத்துவக்கல்லூரியில் வகுப்பு எடுக்கும் மருத்துவர்கள் பலரை கோவிட் வார்டில் பணி அமர்த்துகிறார்கள். நோயாளிகளிடம் நேரடியாக பழக்கம் இல்லாத அவர்களை, இந்த பணியில் அமர்த்துவது பெரிய ஆபத்தில் போய் முடியும் என்கிறார்கள்.

 

கோவிட் பணியில் இருந்து திரும்பும் மருத்துவர்கள் யாரும் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் உடனே வீட்டிற்கு திரும்பி விடுகிறார்கள். இதுவும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இப்படி ஏனோதானோ என்று பணியை சுழற்சி முறையில் வழங்கி வருவதால் மருத்துவர்களிடம் ஒரு அயற்சி ஏற்படுகிறது என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.