Skip to main content

“எனக்கு எய்ட்ஸ் இருக்கு...” - போலீசை பதற வைத்த குற்றவாளி

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

confession of lover who passed away girlfriend in Mumbai

 

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 56 வயது மனோஜ் சஹானி என்பவரும் 36 வயதான சரஸ்வதி வைத்தியா என்பவரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டூகெதரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், நயா நகர் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, அதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்றனர். அங்கு தரையில் பிளாஸ்டிக் பைகளிலும் போர்வையிலும் சுற்றப்பட்ட உடல் பாகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவை அனைத்தையும் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த உடல் சரஸ்வதி வைத்தியாவுடையது என்று உறுதி செய்த போலீசார், அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதையும், அதில் சில பாகங்களை குக்கரில் வேக வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.

 

இதனிடையே மனோஜ் சஹானி தலைமறைவானார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு எந்த தகவல் கிடைத்தாலும் தெரிவிக்கும்படியும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோஜ் சஹானி, மீரா பயந்தரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றியுள்ளார். அப்போது கடைக்கு வந்த சரஸ்வதி வைத்தியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆதரவற்றவர்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். அதன்பிறகு கோயிலில் திருமணம் செய்து கொண்ட சரஸ்வதி வைத்தியாவும் மனோஜ் சஹானியும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் துவங்கினர்.

 

இருவருக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால், மனோஜ் தனது தாய் மாமா என்றே அக்கம் பக்கத்தினரிடம சரஸ்வதி கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசிடம் இருந்து தப்பிக்கவே சடலத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினேன். எனக்கு சரஸ்வதி மகள் மாதிரி எனவும், கணவன் மனைவியாக வாழவில்லை என மனோஜ் போலீஸிடம் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் வழக்கின் போக்கை மாற்றத்தான் இப்படி மாற்றி மாற்றிப் பேசுகிறாரோ என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.