Skip to main content

‘ட்ரான்ஸ் கிச்சன்’ கொலை வழக்கு குற்றவாளியின் வாக்குமூலம்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

Confession of the culprit in the 'Trans Kitchen case!


கோவை ‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் 23 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கீதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதற்கு சங்கீதா காவல்துறையில் புகார் கொடுத்துவிடுவேன் எனத் தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா, கோவை சாய்பாபா காலனியில் வசித்துவந்துள்ளார். இவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் திருநங்கைகளுக்காக ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரத்தியேக உணவகத்தை நடத்திவந்தார். இந்த உணவகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களே பணியில் இருந்துள்ளனர்.


இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் தொலைப்பேசியில் கடைசியாகப் பேசியுள்ளார். அதற்குப் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியாமல் அவரது உணவகப் பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர் எங்காவது ஊருக்குச் சென்றிருப்பார் என அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், இரண்டு நாட்களாக அவரை தொடர்புகொள்ள முடியாததால், புதன்கிழமை காலை அவரது வீட்டிற்குச் சென்று அவரது நண்பர்கள் பார்த்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால், அவர்கள் சாய்பாபா காலனி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 


அதனைத் தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர். சங்கீதாவின் வீட்டிற்குள் சென்று துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது எனத் தேடி பார்த்தபோது, தண்ணீர் பிடித்துவைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து வருவதை உணர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதை சோதனை செய்தபோது, சங்கீதாவின் உடல் அதில் இருந்தது தெரியவந்தது. அவரது உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்களும், கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட காயமும் இருந்துள்ளது. இதனால் இதை கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து, சங்கீதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

இந்த கொலை வழக்குத் தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திவந்தனர். அதில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த, ராஜேஷ் (23) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

cnc

 

பிடிப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது முகநூல் மூலம் சங்கீதா மற்றும் அவர் நடத்தி வரும் உணவகம் குறித்து தெரியவந்தது. அதன்மூலம் தனக்கு வேலை வேண்டும் எனக் கூறி சங்கீதாவிடம் பேசியுள்ளார். பிறகு அவரது உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அதன்பிறகு சங்கீதாவுக்கு பாலியல் ரீதியாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், காவல்துறையிடம் புகார் தந்துவிடுவேன் என சங்கீதா தெரிவித்துள்ளார். அதானால், அவரை கொலை செய்தேன். பின் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்மில் சங்கீதாவின் உடலை மறைத்து வைத்தேன் எனத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.