Skip to main content

ஹோட்டலில் கட்சித் தலைவரின் மோதிரம் மாயம்; அலட்சியமாக நடந்துகொண்ட நிர்வாகம்

Published on 14/06/2024 | Edited on 02/07/2024
Complaint at police that  party leader diamond ring was missing from the hotel

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் முழு உருவ சிலையை பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்திய பாஜக மத்திய அரசைக் கண்டித்து இந்திய குடியரசு கட்சியின் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கண்டனப் பேருரை ஆற்றினார். பின்னர் வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எண் 217 இல் தங்கி  முதல் மாடியில் உள்ள உணவகத்தில் மதிய உணவை அருந்திவிட்டு கை கழுவி விட்டு சிறிது நேரம் கழித்து தன்னுடைய கைவிரலை பார்க்கும்போது கைவிரலில் இருந்த வைர மோதிரம் காணாமல் போனது தெரியவந்தது.

கை கழுவும் இடத்தில் சென்று பார்த்தபோது அங்கு மோதிரம் கிடைக்காமல் போனதால் ஹோட்டல் உள்ளே கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது, மேஜை அருகே மோதிரம் காணாமல் போனது எனத் தெரியவந்தாக கூறப்படுகிறது. இது குறித்து உணவகத்தின் நிர்வாகத்தினரிடம் பேசியபோது முரணாக பதிலளிக்கின்றனர். இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் செ.கு. தமிழரசன் புகார் அளித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஹத்ராஸ் துயரம்; 6 பேர் கைது!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
The Tragedy of Hathras 6 people arrested

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிழச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தார். 

The Tragedy of Hathras 6 people arrested

இந்நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அலிகார் போலீஸ் ஐஜி ஷலப் மாத்தூர் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இறந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கான நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சேவகர்களாக பணியாற்றியுள்ளனர்.

நெரிசல் ஏற்பட்ட போது தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 சேவகர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை கைது செய்வதற்கு ஏதுவாக அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் இந்த சம்பவம் சதியால் நடந்ததா என்பதையும் நாங்கள் விசாரிப்போம். போலே பாபாவின் குற்ற வரலாறு குறித்து விசாரித்து வருகிறோம். நிகழ்ச்சிக்கான அனுமதி அவரது பெயரில் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

சாராய கும்பலுடன் சிக்கிய பெண் போலீஸ்; அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
gujarat cid lady police arrested for smuggling liquor

குஜராத்தில் உள்ள பச்சாவ் பகுதியில் அதிகளவு சாராயம் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பச்சாவ் பகுதியில், சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, கிழக்கு கட்ச் போலீசார் உடனடியாக தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் போலீசார் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியான போலீசார் அந்தக் காரை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். காரின் பின் தொடர்ந்து சென்ற போலீசார், சினிமா பட பாணியில் ஜேசிங் செய்து காரை பிடித்தனர். அப்போது அந்தக் காரில் இருந்த சாராய கடத்தல்காரர் யுவராஜ் சிங்கை கைது செய்த போலீசார், அவருடன் காரில் நீடா சௌத்ரி என்ற பெண் காவலர் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இவர் கிழக்கு கட்ச் பகுதியின் காந்திதம் சி.ஐ.டி. காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். பின்பு காரில் இருந்த சாராயம் மற்றும் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார் யுவராஜ் சிங் மற்றும் நீடா சௌத்ரி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.