Skip to main content

“ஆன்லைன் மோசடிகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பண இழப்பைத் தடுக்கலாம்” - டி.ஜி.பி சைலேந்திரபாபு

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

complaint online scams within 24 hours can prevent money loss DGP Sylendra Babu

 

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமை தாங்கி குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து விருத்தாசலம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓராண்டில் நடந்த 24 திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 92 பவுன் நகைகளையும் சிதம்பரம், காடாம்புலியூர் பகுதியில் 4 திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 38 பவுன் நகைகளையும் உரியவர்களிடம் சைலேந்திரபாபு ஒப்படைத்தார்.

 

மேலும் மாவட்டத்தில், பொதுமக்கள் தவறவிட்ட 15 செல்போன்கள் ஐ.எம்.இ.ஐ எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்படச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த சைலேந்திரபாபு, "கடலூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட 130 பவுன் நகைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் போலீசார் புலன் விசாரணை நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முத்தாண்டிக்குப்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து 36 மணி நேரத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அறிவியல் ரீதியாக போலீசார் புலன் விசாரணை செய்து பழைய வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர்.

 

தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 1,32,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் பேரை நியமித்தோம். இதுவரை உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான காவல் நிலையங்களில் வயது குறைந்த இன்ஸ்பெக்டர்கள்,  சப்-இன்ஸ்பெக்டர்கள்  மற்றும் துணை போலீஸ் சூப்பரண்டுகள் தான் அதிக அளவில் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு எல்லையான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய எல்லைகளில் உள்ள 26 முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆயுதமேந்திய போலீசார் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் மற்ற துறைகளுடன் இணைந்து 16 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து சோதனை நடத்தப்படும். இணையவழி குற்றங்களான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் க்ரைம் என்பது எதிர்காலத்திற்கான குற்றங்கள் ஆகும். இதுவரை மக்கள் சந்திக்காத குற்றங்கள் அவை. வேலை வாங்கித் தருவதாகவும் தொழில் தொடங்க உதவுவதாகவும் மேல் அதிகாரிகள் பேசுவதாகவும் எனப் பல்வேறு வழிமுறைகளில் சைபர் க்ரைம் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

 

இதற்கு 24 மணி நேரத்திற்குள் 190 என்ற கட்டுப்பாட்டு எண்ணில் புகார் அளித்தால் உங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய விடாமல் தடுக்க முடியும். பண இழப்பையும் தடுக்க முடியும். சிவகங்கையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டவரிடம் 26 ஆயிரம் சிம் கார்டுகள், 1200 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் ரூபாய் 5 கோடி தொகைக்கான குற்றங்களில் இதுவரை ரூபாய் 32 லட்சம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் காவல் உதவி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் பயன்படுத்தலாம்" என்று கூறினார். அப்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.