Skip to main content

‘யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடு... கடனை கட்டிட்டு சாவு’-வைரலான மிரட்டல் ஆடியோ!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Complain to Anyone ... Viral Threatening Audio

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஏனாதிமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது விவசாயி ரகோத்தமன். இவர் இந்திய விவசாய முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவராக சங்க பணிகளையும் செய்து வருகிறார். இவர் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளார். சமீபத்தில் அபரிதமான மழை பெய்து விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததால் கடனை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் ஆகியுள்ளது.

 

இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் 11 மணியளவில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒரு பெண் ஊழியர் ரகோத்தமனிடம், ‘தனியார் கம்பெனியை சேர்ந்த ஏ.ஆர்,சியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் திருவெண்ணைநல்லூர் இந்தியன் வங்கியில் கடன் பெற்று உள்ளீர்கள். அந்தக் கடனை நீங்கள் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்’. அப்போது ரகோத்தமன் இந்தியன் வங்கியில் கடன் பெற்றதற்கு தனியார் கம்பெனியை சேர்ந்த நீங்கள் ஏன் கடனை கட்ட சொல்லி கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர் நீங்கள் கடன் பெற்றுள்ள வங்கி எங்களை வசூல் செய்யச்சொல்லி பார்வேர்ட் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

safasf

 

மேலும் பேங்க்ல கடன் பெற்ற எங்களை பேங்க் ஊழியர்கள்தான் கடனை கட்டச் சொல்லி கேட்க வேண்டும். நீங்கள், கடன் வாங்கியதற்காக எங்களை மிரட்டுவீர்களா? சாக கூட சொல்வீர்களா. இதை நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப் போகிறேன் என்றார். அதற்கு அந்த பெண் ஊழியர் என்னுடைய பெயர் அஸ்வினி யாரிடம் வேண்டுமானாலும் போய் புகார் கொடு. நீ செத்தாலும் பரவாயில்லை கடனை கட்டி விட்டு சாவு என்று கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி ரகோத்தமன் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

 

தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கியில் கடன் பெற்ற ஒரு விவசாயி தனியார் கம்பெனியின் பெண் ஊழியர் செத்தாலும் கடனை வெட்டிவிட்டு சாவு என்று கூறிய இந்த செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.