Skip to main content

ஆழ்துளை கிணறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இல்லையேல்....கலெக்டர் அதிரடி

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆழத்துளை கிணறு அமைக்கும் இயந்திர உரிமையாளர்கள், ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை உட்பட பிற துறை அதிகாரிகள் இணைந்த கூட்டுக்குழு கூட்டம், நவம்பர் 5ந்தேதி காலை தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
 

collector warns


இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, திருச்சி அடுத்த மணப்பாறையில் போர்வெல் குழாயில் விழுந்து உயிர்விட்ட சுஜித்வில்சன் விவகாரத்தை பற்றி பேசியவர். இதுப்போன்று நமது மாவட்டத்தில் ஒரு விபத்து நடக்ககூடாது. அதற்கான வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும்.

அரசு மற்றும் தனியார் இடங்களில், நிலங்களில் எங்கெல்லாம் போர்வெல் போடப்பட்டுள்ளதோ, அங்கு சென்று அது சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா ?, மூடாத போர்வெல்கள் மூடப்பட்டுள்ளதா போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து சார்பில் போடப்பட்ட போர்வெல்கள் திறந்துயிருந்தால் அதனை மூடிப்போட்டு மூடிவேண்டும், நீர் வராத போர்வெல் என்றால் அதனை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற வேண்டும்.

போர்வெல் அமைக்கும் இயந்திரங்களின் உரிமையாளர்கள், எங்கெல்லாம் போர்வெல் போடப்படுகிறதோ, அதனை பாதுகாப்பான முறையில் மூடிவைக்க அறிவுறுத்த வேண்டும், விதிகளை மீறி போர்வெல் அமைக்ககூடாது, இதனை மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.


போர்வெல் அமைக்கும் நில உரிமையாளர்களிடம், அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், பைப்பை மூடிப்போட்டு மூட வேண்டும் போன்றவற்றை தெரியப்படுத்த வேண்டும், இல்லையேல் உங்களுக்கான வாகன அனுமதி ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தினார்.

பள்ளி மாணவ – மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கீழ்நாச்சிப்பட்டில் தொடக்கப்பள்ளியில் இறந்த சுஜீத்க்கு கல்வெட்டு வைத்து அஞ்சலி செலுத்தினார் மாவட்ட ஆட்சித்தலைவர் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.