Skip to main content

தேர்தலை நிறுத்த நினைக்கும் கலெக்டர்: அம்பலப்படுத்திய வேட்பாளர் ஜோதிமணி

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

கரூர் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணியும் அதிமுக சார்பில் தம்பித்துரையும் போட்டியிடுகிறன்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே திட்டமிட்டு நேரம் கடத்துவதாக சொல்லி செந்தில்பாலாஜி தரப்பினர் குற்றம் சாட்டிய பின்பு சிறிது தள்ளுமுள்ளுக்கு பிறகு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு பணி செய்ய விடாமல் தடுத்தாக செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

 

 

இதை அடுத்து இறுதி பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்க ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தனர் செந்தில்பாலாஜி தரப்பினர். ஆனால் கரூர் கோட்டாச்சியர் திமுக கொடுத்த ஆன்லைனில் விண்ணப்பத்தை நிராகரித்தார். அதிமுகவிற்கு அனுமதி கொடுத்திருந்தார். அதில் மாலை 1 மணியிலிருந்து 6 மணி வரை என்று கொடுத்திருந்தார். 

 

attack

 

இதன் பிறகு வேட்பாளர் ஜோதிமணியுடன் செந்தில்பாலாஜி கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அதிமுக கொடுத்த அனுமதி கடிதம் போலியானது என்றும் அவர்கள் கொடுத்திருந்த நேரம் 1.49 மணி முதல் 1.49 மணி வரை தவறாக எழுதிக்கொடுத்தை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டிர்கள் என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த தவறு நிர்வாகம் பக்கம் என்று உணர்ந்து கொண்ட கோட்டாசியர் அதிமுகவிற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்து விட்டு திமுகவிற்கு அனுமதி வாங்கினார். அதில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை என்று அனுமதி வாங்கினார். 

 

இதற்கு இடையில் அதிமுகவிற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்த தகவல் வெளியானவுடன் அமைச்சர் விஜயாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து திட்டமிட்டபடி மதியம் 1 மணியிலிருந்து 6 மணி வரை பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவித்தார். 

 

இதற்கு இடையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தி.மு.க. வழக்கறிஞர் செந்தில் தலைமையில் கொடுத்த அனுமதியை ஏன் ரத்து செய்தீர்கள் என்று மாறி மாறி கேட்ட அதிர்ச்சியடைந்த கலெக்டர் வீட்டில் உள்ளே மறைந்து கொண்டார். 

 

அதன் பிறகு வேட்பாளர் ஜோதிமணியிடமும், கரூர் சின்னசாமியிடமும் நள்ளிரவு தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் தேர்தலை நடத்த முடியுமான என்று தெரியவில்லை ஆகவே தேர்தலை நிறுத்த தான் தலைமைக்கு தகவல் கொடுக்க போகிறேன் என்று சொல்லியிருக்கார் அதற்கு வேட்பாளர் எங்கள் பக்கம் இருந்து எந்த பிரச்சனையும் வராது என்று உறுதியளித்திருக்கிறார். 

 

attack

 

காலையில் திமுக. சார்பில் உயர்நீதிமன்றத்தில் இறுதி நாள் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்க மனு அளித்திருந்தனர். உடனே அதிமுகவினரும் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 முதல் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே நுழைய முயன்றனர். நான் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் செய்தேன். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து எங்களை பாதுகாத்தார். நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம். செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி சுமார் 6 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். அவரும் மனிதர் தானே சிறைப்பிடித்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தர்மசங்கடமான நிலையில் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

 

 

கலெக்டர் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே திமுக தரப்பிற்கு பிரச்சாரம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கலெக்டர் உடனே இரண்டு கட்சியினருக்கும் இறுதி கட்ட பிரச்சாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். 

 

attack

 

இதற்கு இடையில் திமுக தரப்பில் நீதிமன்ற அனுமதி இருந்தால் வேட்பாளர் ஜோதிமணி தலைமையில் நாஞ்சில்சம்பத், கே.என்.நேரு ஆகியோருடன் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் அந்த பக்கம் வந்த அதிமுகவினர் கற்களை நோக்கி வீச அந்த இடமே கலவர பூமியாக மாறியது. உடனே போலிஸ் 144 தடை உத்தரவு போட்டு அந்த இடத்தில் வெளியூர் ஆட்களை அப்புறப்படுத்தினார்கள். 

 

 

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் முறைபடி ஆன்லைன் மூறையில் விண்ணப்பம் செய்ததை திட்டமிட்ட பிரச்சார அனுமதியில் குளறுபடி செய்தும் அனுமதி மறுத்த நிலையிலும் பிரச்சனையை பெரிதாக்க நினைக்கையில் நீதிமன்ற அனுமதியுடன் பிரச்சாரத்தை தொடர்ந்தால் கலெக்டர் தனக்கு கொலை மிரட்டல் என்று சொல்லி தேர்தலை நிறுத்த திட்டமிட்டிருக்கிறார் என்கிறார் கரூர் மாவட்ட திமுகவினர். 

 

கரூர் மாவட்ட  ஆட்சியர் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது தான்தோன்றி போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர். இன்னும் பதட்டநிலை அப்படியே இருக்கிறது கரூர் எம்.பி. தொகுதி ! 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.