Skip to main content

சிதம்பரம் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Collector consultation with all departmental officers!

 

சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், வட்டாட்சியர் ஹரிதாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் ஞானசேகர், குமார், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், பரங்கிப்பேட்டை, கிள்ளை, அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் கால்நடைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

 

இந்த கூட்டத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை பணிக்காக ஒவ்வொரு துறையும் என்ன பணிகள் செய்துள்ளது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர், “அனைத்துத் துறை அலுவலர்களும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தற்போது மாமல்லபுரம் நோக்கி புயல் நகர்வதாக வானிலை மையம் கூறி வருகிறது. அதே நேரத்தில் கடலூரை நோக்கியும் புயல் நகரும் சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்துத் துறை அலுவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

 

Collector consultation with all departmental officers!

 

முன்னதாக மாவட்ட ஆட்சியர் பரங்கிப்பேட்டை, கிள்ளை முடசல் ஓடை, அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீட்பு உபகரணங்களை ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு மீட்பு பணிகள் குறித்து அறிவுறுத்தினார். இவருடன்  அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி உடன் இருந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.