Skip to main content

கைதிகள் மீது கை வைக்காதீங்க! ஐ.ஜி. பெரியய்யா அட்வைஸ்!!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

IG Periyayya

 

குற்றவாளிகளை கைது செய்யும்போது அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதுடன், கைதிகளைத் தாக்காமல் விசாரணை நடத்திட வேண்டும் என மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐஜி பெரியய்யா, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் கடந்த இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்தினார். இது, அவ்வப்போது துறை ரீதியாக நடக்கும் வழக்கமான ஆலோசனை, ஆய்வுக் கூட்டம்தான் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.


சேலம் மாவட்டம் ஓமலூரில் ஜூலை 7ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளுடன் ஐ.ஜி. பெரியய்யா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

 

''தமிழகம் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளில் ஒவ்வொரு காவலரும் கடமை உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். மக்களிடம் காவல்துறைக்கு நல்ல பெயர் கிடைத்த நிலையில், சாத்தான்குளம் சம்பவம் அப்பெயரை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. அதனால் கரோனா தடுப்புப் பணிகளில் முழு கவனத்துடன் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும். 


ஒவ்வொரு காவலரும் டென்ஷன் இன்றி, மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். சாலையில் வாகனத் தணிக்கை உள்ளிட்ட களப் பணியாற்றும்போது எவ்வித டென்ஷனையும் வாகன ஓட்டிகளிடம் காட்டக் கூடாது. பொறுமையாக விசாரித்து அனுப்பிட வேண்டும்.


கரோனா பரவும் இப்போதைய சூழலில் இரவு, பகல் பாராமல் பணியாற்றுகிறோம். அனைவருக்கும் நாம்தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும். காவலர்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்து, அதனைச் சரி செய்திட வேண்டும். 


குடும்பப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்தையும் கேட்டுத் தீர்வு கண்டு துணையாக இருக்க வேண்டும். அதேபோல் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது, அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கைதிகளை எக்காரணம் கொண்டும் தாக்காமல் விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் வராமல் பணியாற்றி, காவல்துறைக்கு நற்பெயரை பெற்றிட வேண்டும்'', என்றார் ஐஜி பெரியய்யா.

 

http://onelink.to/nknapp


சேலம் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர், கூடுதல் எஸ்.பி.-க்கள் அன்பு, சுரேஷ்குமார் மற்றும் அனைத்து டி.எஸ்.பி.-க்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.