Skip to main content

மன உளைச்சல்; வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்..!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

Coimbatore government hospital worker passes away

 

கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் பகுதி அருகே உள்ள பி.கே.புதூரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 42). இவர், கோயம்புத்தூர் மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார்.

 

வழக்கம்போல பணிக்குச் சென்றவிட்டு வீடு திரும்பிய ரங்கசாமி, தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவன் மயங்கிய நிலையில் இருக்கிறார் என ரங்கசாமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது மனைவி சேர்த்துள்ளார். 

 

அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இந்தநிலையில் ரங்கசாமி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது செல்ஃபோனில் பேசி, பதிவுசெய்த வீடியோவைக் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது, “மாநகராட்சி மருத்துவமனையில் ஊழியர் ஒருவரும், இளம்பெண்ணும் அறையில் தனிமையில் இருந்தனர். அதை நான் பார்த்துவிட்டேன்.  

 

இதனால், இளம்பெண் உடை மாற்றுவதை நான் வீடியோ மற்றும் ஃபோட்டோ எடுத்ததாக அந்த இளம்பெண்ணும், ஒரு வாலிபர் மற்றும் ஒரு செவிலியர் ஆகிய 3 பேரும் என் மீது அபாண்ட குற்றத்தைச் சுமத்தி மிரட்டினார்கள். நான் செய்யாத தவறைச் செய்ததாகக் கூறி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். 

 

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னால் இனி தலைநிமிர்ந்து வாழ முடியாது. என் சாவுக்கு அவர்கள் 3 பேர்தான் காரணம்.” என அந்த வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் என 3 பேரின் பெயரைக் குறிப்பிட்டு ரங்கசாமி பதிவுசெய்த வீடியோ, கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து ரங்கசாமியின் தற்கொலைக்குக் காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் மற்றும் உறவினர்கள் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.