Skip to main content

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... குற்றவாளிக்கு சிறை

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

கோவையில் சிறுமி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை, பத்திரிகையாளர்களின் கண்களில் இருந்து மறைத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் மகிளா நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 

 

Coimbatore girl rape case Jail for culprit

 

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமி பாலியல் கொலை வழக்கில் கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, நடத்தப்பட்ட விசாரணையில் சந்தோஷ் குமார் குற்றவாளி என தெரியவந்துள்ளது. மேலும், சந்தோஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை சிறையில் அடைக்க துடியலூர் போலீசார் மற்றும் தனிப்படையினர் கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்த இருந்தனர். இதற்காக நேற்று (ஞாயிறு) மதியம் முதல் இரவு 11.45 மணி வரை பத்திரிகையாளர்கள் பந்தய சாலை அருகே உள்ள நீதிபதி குடியிருப்பு முன்பு செய்தி சேகரிக்க காத்திருந்தனர். 


அதேபோல, இன்னும் சில பத்திரிகையாளர்கள் கோவை அரசு மருத்துவமனையிலேயும் காத்திருந்தனர். ஆனால், குற்றவாளி சந்தோஷ் குமாரை கடைசிவரை அழைத்து வரவில்லை. இதையடுத்து, செய்தியாளர்கள் அனைவரும் கலைந்தனர். 
 

இந்த நிலையில், போலீசார் திடீரென தனியார் காரில் மஃப்டி போலீஸார் உதவியுடன் குற்றவாளி சந்தோஷ் குமாரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த அறிக்கையில் விவரங்களை பதிவு செய்து உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து, அவரை அதிகாலை சுமார் 4;30 மணியளவில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஏப்ரல் 15-ம் தேதி வரை குற்றவாளிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

மேலும், இந்த குற்றவாளியை ஏன் இவ்வளவு மர்மமாக அழைத்துச் செல்ல வேண்டும். ஏன் பத்திரிகையாளர்கள் கண் முன்பு குற்றவாளியை காட்டவில்லை என்ற பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.