Skip to main content

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த இளைஞன் கைது...

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
ri

 

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தப்பியோடிய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

 

கோவை பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மகள் ஐஸ்வர்யா, அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரத்தீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. 

 

ஐஸ்வர்யாவின் பெற்றோர் ஐஸ்வர்யாவையும், ரத்தீஷ் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஐஸ்வர்யா இந்த மூன்று மாதங்களாக ரத்தீஷை சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். தன்னுடன் பேசுமாறு ஐஸ்வர்யாவை பலமுறை ரத்தீஷ் வலியுறுத்தி வந்துள்ளார். ஐஸ்வர்யா இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால் பலமுறை ரத்தீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்தநிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஐஸ்வர்யாவைத் தேடிச் சென்ற ரத்தீஷ், தன்னிடம் தொடர்ந்து பேசுமாறும் காதலிக்குமாறும் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல் அங்கு வந்துள்ளார். அப்போது ஐஸ்வர்யாவை ரத்தீஷ் கத்தியால் நான்கு இடங்களில் குத்தியதாகவும், அதனைத் தடுக்க வந்த அவரது தந்தை சக்திவேலையும் கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

காயமடைந்த ஐஸ்வர்யா மற்றும் சக்திவேல் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சக்திவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யா மற்றும் ரத்தீஷ் ஆகிய இரு குடும்பத்தினரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரத்தீஷை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் போலீசார் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.