Skip to main content

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சக அதிகாரி மீது புகார்!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

coimbatore Airforce Administrative College woman incident police investigation

 

கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு சென்ற பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 30 அதிகாரிகள் பயிற்சி பெறும் பொருட்டு கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு வந்துள்ளனர். இதில் டெல்லியைச் சேர்ந்த லெப்டினன்ட் பெண் அதிகாரி ஒருவரை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சக விமானப்படை அதிகாரியான லெப்டினன்ட் அமிர்தேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

 

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, இது தொடர்பாக, பயிற்சி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அந்த பெண் அதிகாரி கோவை மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினர், பெண் அதிகாரியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான லெப்டினன்ட் அமிர்தேஷை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். 

 

அப்போது, லெப்டினன்ட் அமிர்தேஷின் தரப்பு வழக்கறிஞர், விமானப்படை அதிகாரியை கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரமில்லை என்று கூறி பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.  இது தொடர்பாக, பதிலளிக்க காவல்துறை அவகாசம் கேட்டதையடுத்து, விமானப் படை அதிகாரியை ஒருநாள் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அதிகாரியை உடுமலைப்பேட்டைக் கிளை சிறையில் அடைத்தனர். 

 

இதனிடையே, கோவை காவல்துறை நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும், துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என விமானப்படைப் பயிற்சி கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.