Skip to main content

பரங்கிப்பேட்டையில் தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு!

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

coconut tree incident in Parangipettai

                                                     கோப்புப்படம் 

 

பரங்கிப்பேட்டை அருகே தோப்பிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (27). இவர் செவ்வாய்க்கிழமை இன்று அவரது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி உள்ளார், அப்போது தென்னை மரம் முறிந்ததால் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்து காயமடைந்த திருப்பதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர்.

 

coconut tree incident in Parangipettai

 

ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். இளைஞர் திருப்பதி உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவரின் உடல் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்