Skip to main content

முதல்வர் வருகைக்காகக் காத்திருந்த மாநகராட்சி ஆணையர்!

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

cm election campaign at trichy corporation commissioner

இந்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

 

கட்சி ரீதியிலான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததால் அரசு அதிகாரிகள் யாரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணத்தில் பங்கேற்கவில்லை. திருச்சி மாநகரில் உள்ள நத்தர்ஷா தர்காவுக்கு முதல்வர் வருகை தந்த போது திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் முன்னதாக வருகை புரிந்துக் காத்திருந்தார்.

 

அப்போது ஆணையரை புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்ததும் கோபமான மாநகராட்சி ஆணையர் எதுக்கு போட்டோ எடுக்கிறீங்க டெலிட் பண்ணுங்க என்று சத்தம் போட்டார். இது பற்றி நாம் மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, "நான் அலுவல் வேலையாக வரவில்லை. முதல்வரை சந்திக்கவோ, பார்க்கவோ வரவில்லை. பிரார்த்தனை செய்ய வந்தேன்" என கூறியவாறே தர்காவிற்கு சென்றவர் முதல்வர் வரும் வரை தர்கா கேட் அருகே அமர்ந்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் தர்காவிற்கு வந்தபோது அவர் வரவேற்று வணங்கினார். பின்னர் முதல்வர் செல்லும் வரை உலமாக்கள் சந்திப்பு முடிந்து செல்லும் போது வணங்கி விடை பெற்றார். கடைசி வரை ஆணையர் பிரார்த்தனை செய்யவே இல்லை. தேர்தல் நேரத்தில் முதல்வர், அமைச்சர்கள் பிரச்சாரத்தின் போது அரசு அதிகாரிகள் உடன் வர கூடாது என்பது மரபு. 


ஆனால் ஆணையர் மரபை மீறி முதல்வரை வரவேற்க வந்த மாநகராட்சி ஆணையர் தேர்தல் நேரத்தில் சந்தித்தது, தனது பதவி காலத்தை மீண்டும் திருச்சியிலே நீடிக்க செய்ய கோரிக்கை விடுத்தாரா என்பது உலகளும் நத்தஹர்வலி மகானுக்கும்- நாடாளும் முதல்வருக்குமே வெளிச்சம்.

 

இதனிடையே, மழைநீர் சாக்கடையுடன் கலந்து தர்கா புனித ஸ்தலத்தில் நீர் நிறைந்து குடியிருப்புகளில் புகுந்தது. இது குறித்து பொதுமக்கள் பல முறை தகவல் கூறியும் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம், முதல்வர் வருகையையொட்டி கோட்டை ஸ்டேஷனுக்கு அருகில் குப்பை கிடங்காக மாறிய சாக்கடை தூர்வாரி சுவற்றை இடித்து குப்பைகள் அகற்றினர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.