Skip to main content

முதல்வர் வருகைக்காகக் காத்திருந்த மாநகராட்சி ஆணையர்!

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

cm election campaign at trichy corporation commissioner

இந்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

 

கட்சி ரீதியிலான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததால் அரசு அதிகாரிகள் யாரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணத்தில் பங்கேற்கவில்லை. திருச்சி மாநகரில் உள்ள நத்தர்ஷா தர்காவுக்கு முதல்வர் வருகை தந்த போது திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் முன்னதாக வருகை புரிந்துக் காத்திருந்தார்.

 

அப்போது ஆணையரை புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்ததும் கோபமான மாநகராட்சி ஆணையர் எதுக்கு போட்டோ எடுக்கிறீங்க டெலிட் பண்ணுங்க என்று சத்தம் போட்டார். இது பற்றி நாம் மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, "நான் அலுவல் வேலையாக வரவில்லை. முதல்வரை சந்திக்கவோ, பார்க்கவோ வரவில்லை. பிரார்த்தனை செய்ய வந்தேன்" என கூறியவாறே தர்காவிற்கு சென்றவர் முதல்வர் வரும் வரை தர்கா கேட் அருகே அமர்ந்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் தர்காவிற்கு வந்தபோது அவர் வரவேற்று வணங்கினார். பின்னர் முதல்வர் செல்லும் வரை உலமாக்கள் சந்திப்பு முடிந்து செல்லும் போது வணங்கி விடை பெற்றார். கடைசி வரை ஆணையர் பிரார்த்தனை செய்யவே இல்லை. தேர்தல் நேரத்தில் முதல்வர், அமைச்சர்கள் பிரச்சாரத்தின் போது அரசு அதிகாரிகள் உடன் வர கூடாது என்பது மரபு. 


ஆனால் ஆணையர் மரபை மீறி முதல்வரை வரவேற்க வந்த மாநகராட்சி ஆணையர் தேர்தல் நேரத்தில் சந்தித்தது, தனது பதவி காலத்தை மீண்டும் திருச்சியிலே நீடிக்க செய்ய கோரிக்கை விடுத்தாரா என்பது உலகளும் நத்தஹர்வலி மகானுக்கும்- நாடாளும் முதல்வருக்குமே வெளிச்சம்.

 

இதனிடையே, மழைநீர் சாக்கடையுடன் கலந்து தர்கா புனித ஸ்தலத்தில் நீர் நிறைந்து குடியிருப்புகளில் புகுந்தது. இது குறித்து பொதுமக்கள் பல முறை தகவல் கூறியும் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம், முதல்வர் வருகையையொட்டி கோட்டை ஸ்டேஷனுக்கு அருகில் குப்பை கிடங்காக மாறிய சாக்கடை தூர்வாரி சுவற்றை இடித்து குப்பைகள் அகற்றினர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.