தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

cm edappadi-palanisamy-inaugurated-book-fair-in-chennai

Advertisment

Advertisment

700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் இரண்டு கோடி புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் முதல்வருடன் அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், அமைச்சர் டி. ஜெயகுமார், அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

cm edappadi-palanisamy-inaugurated-book-fair-in-chennai

இந்த கண்காட்சி ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீழடி அகழாய்வு என்ற தலைப்பில் 3 ஆயிரம் சதுரஅடியில் பிரம்மாண்டமான அரங்கம் மாநில தொல்லியல் துறை ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுள்ளது, இந்த கண்காட்சியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.