Skip to main content

இரண்டு நாட்களாக துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் – குப்பை நகராக மாறிய ஆம்பூர்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

Cleaners struggle for two days - Ambur turned into a garbage city!

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்புர் நகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான சம்பளம், கரோனா கால போனஸ், கரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதுக்குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டும், வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை.

 

இந்நிலையில் சம்பளம், போனஸ், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் குப்பை அள்ளச் சொல்லுவதை குறிப்பிட்டு ஐந்து அம்ச கோரிக்கைகளுடன் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதியென இரண்டு நாட்களாக குடும்பத்தினருடன் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து போராடி வருகின்றனர்.

 

Cleaners struggle for two days - Ambur turned into a garbage city!

 

போராட்டம் செய்யும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் ஆம்பூர்  நகரம் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளன. பொங்கல் திருநாளில் நகரம் சுத்தமாகயில்லாமல் அசுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் காரணமாகிவிட்டார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

'திரும்பி போ... திரும்பி போ...'- இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 'Go back... Go back...'- Youth Congress struggle

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'திரும்பி போ... திரும்பி போ... மோடியே திரும்பி போ...' என  கோஷங்களை எழுப்பி வருவதால் அந்த பகுதியில் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோவை அவினாசி பாளையத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.