Skip to main content

ஆயுதங்களுடன் குவிந்த மக்கள்... இரண்டுமுறை போலீசார் துப்பாக்கி சூடு!  

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் இயற்கை வளங்கள் அழியும் என்றும், இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும் கூறி சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் புதுச்சேரி கடல் பகுதியில் ஒருசில மீனவ கிராமத்தைச் சார்ந்த மீனவர்கள் நடுக்கடலில் சென்று சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக மற்றொரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று நல்லவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று வீராம்பட்டினம் மீனவர்கள் கடற்கரை அருகே சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம், "சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி ஏன் மீன் பிடிக்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நல்லவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பெரிய படகு மூலம் வீராம்பட்டினம் மீனவர்களின் பைபர் படகை இடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வீராம்பட்டினம் மீனவர்கள் தங்களுடைய கிராம மீனவ மக்களுக்கு தகவல் கொடுத்தனர். 

 

இதனையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரும்பு, கத்தி, ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடற்கரை ஓரமாகவே நல்லவாடு மீனவ கிராமத்திற்கு சென்று அப்பகுதி மீனவர்களை தாக்க முற்பட்டனர். அப்போது, இரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் கடுமையாக தாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதனையறிந்த தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனவர்களை அமைதிப்படுத்தினர். மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து இரு கிராம மீனவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

பின்னர் அதன் தொடர்சியாக வம்பாகீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. முகத்துவாரம் அருகே இரண்டு மீனவ கிராம மக்களும்  கத்தி, அருவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரு கரையோரம் நின்று ஒருவருக்கு ஒருவர் கல்லால் தாக்கி கொண்டனர். இதனையடுத்து மீனவர்களை கலைந்து செல்ல எச்சரித்த போலீசார் மீண்டும் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 

மீனவ கிராமங்களுக்கு இடையே அடுத்தடுத்து நடைபெற்ற மோதல் மற்றும் கலவரத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது