Skip to main content

சினிமா பாணியில் நள்ளிரவில் ஒரு ஊரே சூறையாடல்... போலீசார் குவிப்பு

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

A cinema-style midnight robbery ... police concentration

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன் விற்பதில் ஏற்பட்ட தகராறில் பலருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அருகே உள்ள கந்தப்பக்கோட்டை பகுதிக்கு நேற்று காலை மினி வேனில் மீன்விற்க சென்றுள்ளனர். அப்பொழுது கந்தப்பகோட்டையை சேர்ந்த இரண்டு வாலிபர்களுடன் மீன் விற்க சென்ற மூவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்மைநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கந்தப்பகோட்டையை சேர்ந்த இரண்டு வாலிபர்களின் தரப்பு பள்ளப்பட்டியில் மீன் விற்பனை செய்தவர்களின் மினிவேனை அவர்களது ஊருக்கே சென்று இரவில் அடித்து நொறுக்கியுள்ளனர்.

 

A cinema-style midnight robbery ... police concentration

 

இதனால் ஆத்திரமடைந்த பள்ளப்பட்டியை சேர்ந்த மீன் விற்ற நபர்கள், அடியாட்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோருடன் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மூன்று வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதோடு, கால்நடைகளும் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தகவலறிந்து போலீசார் அதிகப்படியாக அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா பாணியில் நள்ளிரவில் ஒரு ஊரே சூறையாடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.