Skip to main content

மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு உதவிய சோளிங்கர் ரவி!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

Cholingar Ravi helps rain-affected tribal people!

 

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொங்காரம்பட்டு கிராமத்தில் வேலூர் - ஆரணி சாலையில், சாலையோரத்தில் ஏரிக்கரை முன்பு பழங்குடி இனத்தைச் சேர்ந்த குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 13 குடும்பத்தினர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். மூங்கில் கொண்டு கூடை, ஏணி போன்ற கைவினை பொருட்களை உருவாக்கி விற்பனை செய்கின்றனர்.

 

இவர்களுக்குப் பாதுகாப்பான வீடு இல்லை. மூன்று தலைமுறைகளாக இந்த சாலை ஓரத்திலேயே வசித்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த வாரத்தில் நமது நக்கீரன் இணையத்தில் அம்மக்களின் அவல நிலை குறித்து  செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டிருந்தோம்.

 

கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் இவர்களின் கூரை வீடுகளில் தண்ணீர் புகுந்து வசிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகம்  இவர்களை அழைத்துச் சென்று முகாமில் தங்க வைத்துள்ளனர்.

 

Cholingar Ravi helps rain-affected tribal people!

 

இந்நிலையில் இவர்கள் சார்பாக நம்மைத் தொடர்பு கொண்ட விஜயா என்ற பெண்மணி, மழை வந்து வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. நாங்கள் சமைக்கப் பொருள் எதுவும் இல்லாமல் உள்ளோம். எங்களுக்கு யார் மூலமாவது ஏதாவது உதவி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். நமது செய்தியினை பார்த்தது கலங்கிய சமூக சேவகர் சோளிங்கர் என்.ரவி நம்மைத் தொடர்பு கொண்டார். மழையால் அவர்கள் வேலைக்குச் செல்லாததால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் உள்ளார்கள் எனக்குறிப்பிட்டோம்.

 

Cholingar Ravi helps rain-affected tribal people!

 

அரிசி, மளிகைப்பொருள் தந்து உதவுகிறேன் என முன்வந்தார். நவம்பர் 28 ஆம் தேதி காலை அந்த குடும்பங்களுக்கு, 10 கிலோ அரிசி சிப்பம், பருப்பு, சமையல் எண்ணெய், சோப்பு என தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சமூக சேவகர் சோளிங்கர் என்.ரவி வழங்கினார். தங்களைத் தேடி வந்து உதவி செய்ததற்கு அம்மக்கள் அவருக்கு நன்றியைத் தெரிவித்தனர். தங்களது நிலையை அறிந்து உதவிகள் கிடைக்க வழி செய்த நக்கீரனுக்கும் அம்மக்கள் நன்றியைத் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.