Skip to main content

''திராவிடத்தை வளர்த்ததில் சின்னாளபட்டி பெரும்பங்கு வகிக்கிறது''-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

"Chinnalapatti plays a major role in developing Dravida" - Minister I. Periyaswamy's speech!

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி மற்றும் தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தண்டபாணி, தேவாங்கர் மகாஜன சபை தலைவர் பெத்தனசாமி, செயலாளர் தொழிலதிபர் ராகவன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், பள்ளி தாளாளர் ராகவன், செயலாளர் பெத்தனசாமி, ஆசிரியர் காசிராஜன், பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபாகனகராஜ், துணைத்தலைவர் ஆனந்திபாரதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

பள்ளியில் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிவிட்டு மாணவர்கள் மத்தியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''சின்னாளபட்டி வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கல்வி அறிவை வளர்த்ததில் முதல் பங்கு வகிப்பது தேவாங்கர் பள்ளிகளே. நான் சிறுவனாக இருக்கும்போது இப்பள்ளியில் விளையாடுவதற்காக வந்துள்ளேன். இன்று இப்பள்ளி உயர் நிலையை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அதை நிர்வாகித்த நிர்வாகிகளே. தி.மு.க.வைச் சேர்ந்த ஏ.எம்.டி.நாச்சியப்பன் தொடங்கி, டி.எஸ்.வி.வி. தியாகராஜன், ஸ்டார் பொம்மை யாசேகர், இராமநாதன் சன்ஸ் பாபு, தண்டபாணி, ஹேமலதா இன்று ராகவன் வரை அனைவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களே. திராவிடத்தை வளர்த்ததில் சின்னாளபட்டி பெரும்பங்கு வகிக்கிறது. இப்பள்ளி கல்வியில் மட்டும் அல்ல விளையாட்டுத்துறையிலும் சிறந்த முறையில் உள்ளது.

 

"Chinnalapatti plays a major role in developing Dravida" - Minister I. Periyaswamy's speech!

 

இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்று வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கு கடந்த 30 வருடங்களாக நான் உதவி செய்திருக்கிறேன் என்பதை  மனமகிழ்ச்சியுடன் மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இங்கு பள்ளி படிப்பை முடித்தவுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பெறலாம். தமிழக அரசு மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கி மாணவ மாணவிகளின் கல்வி நலனை காத்த முதல்வராக மு.க.ஸ்டாலின்  உள்ளார். அவருக்கு ஒவ்வொரு மாணவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

கட்சி பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister I.Periyasamy consultation with party officials!

ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவால் ஆத்தூர் தொகுதியில் கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமைச்சரின் உத்தரவுப்படி மகளிர் அணியினர், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 45 வருடங்களாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்த திமுகவினர் முதல் முறையாக கூட்டணி கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்திய கூட்டனியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டனியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றிக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணி ஆற்றிவருகிறார்.

Minister I.Periyasamy consultation with party officials!

அத்தோடு, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் ஆத்தூர் தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் பம்பரம்போல் சுழன்று தேர்தல் பணியாற்றி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வைத்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் உட்பட சில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து   சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதோடு நமது வெற்றி இந்திய அளவில் பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு நீங்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.