Skip to main content

குழந்தையின் உயிரைப் பறித்த குரங்கு! - நெஞ்சைப் பிழியும் சோகம்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

childrens monkeys peoples thanjavur district


தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் கோட்டை அகழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பெயிண்டராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 5 வயதில் ஜீவிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புவனேஸ்வரிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

 

இந்த நிலையில் இன்று (13/02/2021) மதியம் வீட்டிற்குள் குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு புவனேஸ்வரி கழிவறைக்குச் சென்ற நேரத்தில், வீட்டுக்குள் நுழைந்த இரண்டு குரங்குகள், குழந்தைகளைத் தூக்கிச் சென்றதால், குழந்தையின் அழுகுரல் கேட்டு புவனேஸ்வரியும் அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, ஒரு குழந்தையை வீட்டின் மேற்கூரையில் குரங்கு வைத்திருந்தது. குரங்கை விரட்டிய போது குழந்தையைத் தூக்கிப் போட்டுவிட்டு குரங்கு தப்பியோடியது. 
 

childrens monkeys peoples thanjavur district


அந்தக் குழந்தையை மீட்டுப் பார்த்தபோது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. மற்றொரு குரங்கு குழந்தையுடன் ஓடிவிட்டது. அதைத் தேடியபோது, அருகில் உள்ள குளத்திற்குள் குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ந்த பொதுமக்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாகக் கூறினர். இந்தச் சம்பவத்தால் தாய் உள்பட உறவினர்கள் கதறி அழுதனர். 

 

இது குறித்து அப்பகுதியினர் கூறும் போது, "கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக 20- க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து, அட்டகாசம் செய்கிறது. எந்தப் பொருளும் வைக்க முடியவில்லை. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி மற்றும் வனத்துறையிடம் பலமுறை முறையிட்டும் அலட்சியமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று ஒரு குழந்தையைப் பறிகொடுத்து நிற்கிறோம்" என்று கண்கலங்கினர்.
 

childrens monkeys peoples thanjavur district


அதிகாரிகள் எப்போது தான் மக்களுக்காகச் செயல்படுவார்களோ! அலட்சியம் காட்டி குழந்தையின் உயிர்போகக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.