Skip to main content

அடுத்தடுத்து குளத்தில் மூழ்கி பலியாகும் சிறுவர்கள்.. அபாய பதாகை வைத்த போலீசார்!

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வருடங்களுக்கு பிறகு, இந்த ஆண்டு தான் குளங்களில் தண்ணீர் நிரம்பும் அளவில் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வந்தாலும், கடந்த 10 நாட்களில் நடக்கும் துயர சம்பவங்களால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


கடந்த 10 நாட்களுக்கு முன்பு விராலிமலை அருகில் உள்ள ஆவூர் கிராமத்தில் சின்னக்குளத்தில் தண்ணீர் நிறைந்திருப்பதை பார்த்து ஆனந்தமாக குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் சேற்றில் சிக்கி மூச்சு திணறி பலியானார்கள். அந்த சோகம் மறைவதற்குள் கடந்த 2- ஆம் தேதி கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 8- ஆம் வகுப்பு மாணவன் அந்தோணிசாமி மகன் ஸ்டீபன்ராஜ். பாரதப் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை பள்ளியில் மட்டுமல்ல, தனது தெருவிலும் செயல்படுத்தி அனைவராலும் பாராட்டப்பட்ட மாணவன் மங்கனூர் பெரிய குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று நடுக்குளத்திற்கு சென்று திரும்ப முடியாமல் தண்ணீரில் மூழ்கி பலியானார். 


நல்ல ஒரு இளம் சமூகப் போராளியை இழந்து விட்டோம் என்று கிராமமே கண்ணீர் வடித்தது. இந்த மாணவன் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து கடைப்பிடித்தான் என்பதால் அவனது குடும்பத்திற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

Children drowning in ponds next   Cops with risk banner POLICE AWARENESS



இந்த சோகத்திலிருந்து கந்தர்வகோட்டை மக்கள் மீளாத நிலையில் தான் இன்று அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா சின்னக்கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்  மகன் கிஷோர் குமார்(8). 3- ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக விடுமுறை என்பதால், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கோவிலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கிஷோர்குமார் வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் பரமேஸ்வரியுடன், அங்கு உள்ள சங்கு ஊரணியில் கிஷோர் குமார் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கிய கிஷோர்குமார், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். 
 

இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார்  பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அப்பகுதி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பல வருடங்களுக்கு பிறகு தண்ணீர் நிறைந்துள்ள குளக்கரைகளில் எச்சரிக்கை பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் இதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் தண்ணீர் நிறைந்துள்ள குளங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைத்தால் நல்லது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.