Skip to main content

முதல்வரின் அறிவிப்பு; நன்றி சொன்ன முல்லைப் பெரியாறு விவசாய சங்கங்கள் 

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

தென்மாவட்டத்தில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் கட்டி கொடுத்திருக்கிறார்.  

 

இப்படி முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த பென்னிகுவிக்கை இந்த ஐந்து மாவட்ட விவசாயிகளும், பொது மக்களும் கடவுளாக எண்ணி தங்கள் கடைகளுக்கும் பிள்ளைகளுக்கும் பென்னிகுவிக் பெயரவே தொடர்ந்து வைத்து வருகிறார்கள். அதுபோல் பென்னிகுவிக் பிறந்த நாளான டிசம்பர் 16ஆம் தேதி நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை பொங்கல் வைத்து தங்கள் வீட்டு விழா போல் கொண்டாடுவது வழக்கம். லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் பொங்கல் வைத்து விழா கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கடந்த 16ஆம் தேதி பட்டி தொட்டி முதல் மணி மண்டபம் வரை பொது மக்களும், விவசாயிகளும் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். 

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

கடந்த அதிமுக ஆட்சியில் பென்னிகுவிக் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்தாண்டும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணகுமார், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் அரசு சார்பில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான முத்துராமலிங்கம் உள்பட விவசாய சங்க நிர்வாகிகளும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.சும் பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்தினார். பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கர்னல் பென்னிகுவிக்குக்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் உள்ள பூங்காவில் சிலை வைக்கப்படும்; அதற்கான பணிகளை இங்கிலாந்திலுள்ள தமிழர்கள் மூலம் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்று கூறினார். அதைக்கேட்டு 5 மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

இது சம்பந்தமாக ஐந்து மாவட்ட விவசாயச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொன்காட்சிக் கண்ணனிடம் கேட்டபோது, “இங்கிலாந்தில் பிறந்தும்கூட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்துதான் முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் எங்களுக்காக கட்டிக் கொடுத்துவிட்டுப்போனார். அந்த நன்றியை உலகம் இருக்கும்வரை தென்மாவட்ட மக்கள் மறக்க மாட்டார்கள். ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த கர்னல் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியதின் பேரில்தான் லோயர் கேம்பில் மணிமண்டபம் கட்டி பென்னிகுவிக் சிலையையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதுபோல் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு இங்கிலாந்து நாட்டிலேயே சிலை வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பிலும் பொது மக்கள் சார்பிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

கடந்த இரண்டு  மாதங்களுக்கு முன்பு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முல்லைப் பெரியார் அணையை நேரில் சென்று ஆய்வு செய்துவந்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

நமக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை வருடத்திற்கு ஒரு முறையாவது முதல்வர், அமைச்சர்கள் யாராவது ஒருவர் நேரில் பார்த்து வந்தால்தான் கேரளாக்காரர்களுக்கு பயம் இருக்கும். தற்போது 142 அடியிலிருந்து 152 அடிவரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்க முடியும். கடந்த காலங்களில் தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று ரசித்து இருக்கிறார்கள். அதுபோல் பள்ளி மாணவ மாணவிகள்கூட முல்லைப் பெரியாறு அணையைப் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். நானும் மூன்று முறை மாணவப் பருவத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு போய் வந்திருக்கிறேன். அந்த அளவுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடுவது பயனுள்ளதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளையும் மாணவ மாணவிகளையும் அனுமதிக்காமல் வெறும் போட்டிங் மட்டும் போய்வரும் நிலை தற்போது இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழக முதல்வரும் கேரளா முதல்வரும் பேசி மீண்டும் முல்லைப் பெரியாறு அணை வரை சுற்றுலா பயணிகள் போய் வர அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.