Skip to main content

விழுப்புரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆலோசனை! 

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

Chief Secretary to the Government of Tamil Nadu meeting in Villupuram

 

தமிழ்நாடு அரசு பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் அடிப்படையில் அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அதிகாரிகளிடம் ஆலோசனை, விழிப்புணர்வு, செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். 

 

அவ்வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு அதிகாரிகளிடம் நேற்று (06.06.2021) இரவு நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 


அப்போது தலைமைச் செயலாளர் இறையன்பு, "தமிழகம் முழுவதும் நோய் பரவல் உள்ளது. இருந்தும் நகரப் பகுதிகளை விட கிராமப்புறங்களில்தான் நோய்த் தொற்று  அதிகமாக பரவியுள்ளது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை முழுமையாக கட்டுப்படுத்தி நோய்த் தொற்று இல்லாத நிலையை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். 


ஒரு தெருவில் மூன்று பேர்களுக்கு மேல் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் அப்பகுதியைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை போன்ற பொருட்களை உடனுக்குடன் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். வெளியாட்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்லாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மருத்துவ முகாம்கள், பரிசோதனை முகாம்கள், தடுப்பூசி செலுத்தும் முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடைகள் திறந்தால் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் கூடும். அப்படி அதிக அளவில் கூட்டம் சேராத வகையில் அதிகாரிகளும் காவல்துறையினரும் சேர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். 


தனிமனித இடைவெளியை வியாபார நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதைக் கடைப்பிடிக்காத வியாபார நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.