
திமுக பேச்சாளரும், நடிகருமான நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் திவீர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்தின் உடல் நிலை குறித்து முதல்வர் கேட்டறிந்துள்ளார். நாஞ்சில் சம்பத்தின் மகன் மருத்துவர் சரத் பாஸ்கரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.