Skip to main content

சசிகலா உடல்நலம் குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்! - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Chief Minister should clarify about Sasikala's health - BR Pandian

 

சசிகலா உடல்நலம் குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 

 

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்கள், பேரழிவு பெருமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டது. 'அறுவடை ஆய்வறிக்கை' என்கிற பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு கொடுப்பதில் கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு வறட்சி பாதித்த போது மாவட்ட அளவில் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்ததோடு மட்டுமல்ல, உரிய இழப்பீட்டை 100% பெற்றுக் கொடுப்பதற்கான உத்தரவாதம் கொடுத்து பெற்றுக் கொடுத்தார்.

 

அதனைப் பின்பற்றி தற்போதைய முதலமைச்சர் உடனடியாக உரிய 100% இழப்பீடு வழங்க உத்தரவாதம் அளித்திட வேண்டும். அதனை மார்ச் மாதத்திற்குள்ளாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35,000 இழப்பீடாகப் பெற்றுத்தர வலியுறுத்தி, நாளை 22ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முற்றுகையிட உள்ளனர். மயிலாடுதுறையில் நான் (பி.ஆர்.பாண்டியன்) தலைமையேற்க உள்ளேன்.

 

காவிரி பிரச்சனையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக உரிமையை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உறுதியோடு இருந்து மீட்டுக் கொடுத்தார். அந்த நடவடிக்கைக்கு முழு பின்புலமாக சசிகலா இருந்து வந்தார். தற்போது கர்நாடக சிறைவாசம் முடிந்து விடுதலையாக கூடிய நிலையில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும் வெளிவந்த செய்தி டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும் சந்தேகமும் அளிக்கிறது. காரணம் காவிரிக்காக நீதி கேட்ட சட்டப் போராட்டத்திற்கு ஜெயலலிதா அவர்களோடு துணை இருந்தவர் என்ற அடிப்படையில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளது.

 

எனவே அவரது உடல்நலம் குறித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட மருத்துவக் குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்து சசிகலாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து காவிரி டெல்டா விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்த தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

 

இந்த நிகழ்வில், மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட கவுரவ தலைவர் எம்.செல்வராஜ், மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், திருத்துறைபூண்டி ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், துணைச் செயலாளர் கச்சனம் தவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Next Story

விஜய பிரபாகரனுக்கு எந்த தொகுதி; தேமுதிக அலுவலகம் வந்த எடப்பாடி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Vijaya Prabhakaran in Virudhunagar; Edappadi came to the DMDK office

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டார். இந்நிலையில் 18 இடங்களில் திமுக - அதிமுக நேரடியாக களத்தில் மோதவுள்ளது.

மேலும், அதிமுகவில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக போட்டியிடும் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தேமுதிக அலுவலகம் உள்ள கோயம்பேட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர்.