Skip to main content

''காரில் பவனி வருபவர்களுக்கு இந்த திட்டத்தை முதல்வர் அறிவிக்கவில்லை'' - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

nn

 

திடீர் நகர் மற்றும் கோதாமேடு பகுதி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்திய மகளிர் தின விழா கொண்டாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசுகையில், ''இந்தியாவில் இருக்கின்ற 36 மாநிலங்களில் மகளிருக்கு அதிகமான சலுகைகளை தந்து கொண்டிருக்கின்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் சட்டமன்றத்தில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார்கள். அந்தத் திட்டத்தை முதலில் தொடங்குவதற்கு முன்னால் தேர்தல் அறிக்கையை தயாரித்து தந்தவர்கள் என்ன எழுதி தந்தார்கள் என்றால், மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு தருகின்ற அந்தத் தொகை உதவித்தொகை என்று எழுதி தந்தார்கள்.

 

அதன் பிறகு முதலமைச்சர் அந்த தேர்தல் அறிக்கையை வாங்கி திருத்தி அது உதவித்தொகை அல்ல உரிமைத் தொகை என்றார். நம்முடைய சகோதரிகளுக்கு, நம் வீட்டுப் பெண்களுக்கு அரசு தருவது உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை என்றார். இந்த பட்ஜெட்டில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் அந்தத் திட்டத்தை சென்னையில் நானே தொடங்குவேன் என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதை அறிவித்த உடனே ஒரு சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால் 7,000 கோடி அறிவித்துள்ளீர்கள் இரண்டு கோடியே 10 லட்சம் ரேஷன் கார்டு இருக்கு. இவ்வளவு பேருக்கும் எப்படி கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.

 

நிதித்துறை அமைச்சர் மிக தெளிவாக சொல்கிறார் உரியவர்களுக்கு இது கொடுக்கப்படும். இதற்கு உரியவர்கள் யார் என்றால் இந்த அரங்கில் இருப்பவர்கள் தான் உரியவர்கள்; திடீர் நகரில் இருக்கக்கூடிய அத்தனை பேருமே உரியவர்கள்; கோதா மேட்டில் இருக்கின்ற 100 சதவீதம் பேரும் உரியவர்கள் தான்; வாழத் தோப்பில் இருக்கின்ற நூறு சதவீதம் பேரும் உரியவர்கள் தான்; அப்பாவு நகர் குடிசை மாற்று வாரியத்தில் இருக்கக்கூடிய 100 சதவீதம் பேரும் உரியவர்கள் தான்; கொத்தவால் சாவடி குடிசை மாற்று வாரியத்தில் இருக்கும் 100 சதவீதம் பேரும் உரியவர்கள் தான். ரங்கராஜபுரத்தில் இருப்பவர்களுக்கா தர வேண்டும்; பெசன்ட் நகரில் இருப்பவர்களுக்கா தர வேண்டும்; எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுக்க வேண்டும். அவர்கள்தான் உரியவர்கள்.

 

உரியவர்கள் அனைவருக்குமே இந்த உரிமைத் தொகை தரப்படும். பெரிய காரில் பவனி வருபவர்களுக்கு தர வேண்டும் அல்லது இன்கம் டேக்ஸ்-ல் லட்சக்கணக்கில் வரி கட்டுபவர்களுக்கு தர வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை தமிழக முதல்வர் அறிவிக்கவில்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.