Skip to main content

சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் 10 நாட்களாகப் பூட்டப்பட்டதால் பரபரப்பு!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

Chidambaram

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 836 வீடுகளும் 2,600 பொதுமக்களும் வசிக்கின்றனர். ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அன்புச்செல்வன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர். துணைத் தலைவராக மாற்று சமூகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி உள்ளிட்ட  பத்து உறுப்பினர்கள் உள்ளனர்.

 

இந்நிலையில், ஊராட்சி மன்றச் செயலாளராகப் பதவி வகித்து வந்த கண்ணன் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணி விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். இதனால், தற்காலிகமாக அருகே உள்ள பெராம்பட்டு கிராம ஊராட்சி செயலாளர் வடிவேல் என்பவரை நியமித்து, அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். வடிவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி தலைவர் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அந்த ஊராட்சிக்கு வடிவேலை மீண்டும் நியமித்து உள்ளனர்.

 

இதனால் மன உளைச்சல் அடைந்த தலைவர் அன்புசெல்வன் ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டுப் போட்டு பூட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் பாதித்தது. இதனை அறிந்த குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ராஜ் மற்றும் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து ஊர்ப் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு நிலவியது.

 

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் அன்புசெல்வன் கூறுகையில், "இந்த ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றுபவர் கண்ணன், அவர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒப்பந்தப் பணிகளைச் செய்து வருகிறார். இவரால் ஊராட்சியில் உள்ள வேலைகளைப் பார்க்க நேரமில்லை என்று அவரது மனைவின் அக்கா தேவியை கடந்த 3 வருடமாகச் செயலாளர் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து தேர்தல் மூலம் தேர்வு பெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேவி பணியாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரை பணி செய்ய அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தம் எண்ணிடம் மிரட்டும் தோனியில் ஏன் தேவியை வைத்துப் பணி செய்தால் என்ன எனப் பேசினார். இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பால் நான் அனுமதிக்கவில்லை. இதுதான் எதிர்ப்புக்கு காரணம். மேலும் ஊராட்சியில் எந்தக் கணக்கும் பராமரிக்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் உங்கள் வேலையைப் பாருங்கள் இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

 

மீன்குளம் குத்தகை எடுப்பதில் அவர்கள் சொல்லும் நபருக்குக் கொடுக்கவேண்டும் என்பதால், அவர்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட மிரட்டி நிர்பந்தம் செய்கிறார்கள். நான் பட்டியல் சமூகம் என்பதால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார்கள். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியருக்குப் புகார் கொடுத்துள்ளேன். தற்போது கண்ணன் விடுப்புக்குச் சென்றதால் பல்வேறு குற்றசாட்டுக்கு உள்ளான வடிவேலை செயலாளராக நியமித்துள்ளனர். இதற்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் நான்அலுவலகத்தைப் பூட்டினேன். அதன் மேல் கண்ணன் தரப்பினரும் ஒரு பூட்டுபோட்டனர்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.