Skip to main content

வெகு விமர்சையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

chidambaram natarajar temple aruthra tharisana festival 

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில், ஸ்ரீ சிவகாமசுந்தரி நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் விபூதி, பால், தயிர், தேன், சந்தனம், பழச்சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் பஞ்சமூர்த்திகள் கிழக்கு சன்னதி வழியாக, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, மீண்டும் கிழக்கு சன்னதி வழியாக கோவிலுக்குள் வந்து ஆயிரம் கால் மண்டபம் முன்பு நின்று தரிசன காட்சி நடைபெற்றது.

 

இதனையடுத்து கோவில் ராஜ சபையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தேவாரம், திருவெம்பாவை, பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து மூலவர் ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் எழுந்தருளி சபைக்கு புறப்பட்டனர். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நடன பந்தலுக்குள் மூலவர் ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து அங்கு பெரும் திரளாக திரண்டு இருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா, என்றும் ஹர ஹர கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். இந்த தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் அதிகமாக காணப்பட்டது. மேலவீதி கோபுர வழியிலும், சிவகங்கை குளம் அருகிலும் சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் அருகிலும், கீழ சன்னதி, ஆயிரங்கால் மண்டபம் முன்பும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலில் உள்ள அனைத்து இடங்களிலும் பக்தர்கள் திரண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து மாலை ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோயில் உள் பிரகாரத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து கருவறையில் வைத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர், பக்தர்கள், வெளியூர் பக்தர்கள், வெளி மாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள், வெளிநாட்டு  பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.

 

மேலும் காவல்துறை சார்பில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எடுத்தும் வகையில் பாதுகாப்போடு தரிசனத்தை கண்டு சொல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மேற்பார்வையில், சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.