Skip to main content

ஊரடங்கு நேரத்தில் சிறப்பாகப் பணியாற்றும் காவல்துறை, ஊர்க்காவல் படை, காவல்துறை நண்பர்கள் குழுவினருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய எம்.எல்.ஏ!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

chidambaram mla police coronavirus prevention


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கடலூர் மாவட்டம் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கும் விதத்தில் வீடுகளை மறந்து வெயிலிலும் தெருக்களிலும் நின்று பணி செய்த சிதம்பரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள புவனகிரி, மருவாய், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், சிதம்பரம், சிதம்பரம் தாலுக்கா, அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அனைத்துக் காவலர்கள், ஊர்க்காவல்படையினர், காவல்துறை நண்பர்கள் குழு மற்றும் காவல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டும் வகையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் அனைவருக்கும் 25 கிலோ அரிசி மூட்டை, மளிகைப் பொருட்கள். காய்கறிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். 

நிவாரணப் பொருட்களை வழங்கிய எம்.எல்.ஏ.வுக்கு சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் நன்றி தெரிவித்து கொண்டார். இதேபோல் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டில் முடங்கியுள்ள குமராட்சி அருகேயுள்ள சிவாயம், தவர்தாம்பட்டு, வக்காரமாரி, பரங்கிப்பேட்டை, வேளிங்கராயன்பேட்டை, புதுகுப்பம், மீதிகுடி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்குத் தலா 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது. 

 

 


அரிசிகளை வாங்கிக் கொண்ட கிராம மக்கள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும் அரிசி ரேசன் கடையில் போடுகிறார்கள். மளிகைப் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் கஞ்சியைக் காய்ச்சிக் குடிக்கிறோம். அரிசிக்குப் பதில் மளிகைப் பொருட்கள் கொடுத்தால் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்று எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  




 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.