Skip to main content

சிதம்பரம் நகரத்திலுள்ள குளங்களை தூர்வாரி புனரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள ஞானப்பிரகாசர் குளம், ஆயிகுளம்,குமரன் குளம், நாகச்சேரி குளம், பெரிய அண்ணாகுளம், ஒமக்குளம், தச்சன்குளம், பாலமான் குளம்  உள்ளிட்ட 8 குளங்களை தூர்வாரி  புனரமைக்க சிதம்பரம் நகராட்சிக்கும், EFI தொண்டு நிறுவனத்திற்கும் இடையே மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மஹாஜன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

CHIDAMBARAM LAKE CLEANING PROCESS AGREEMENT SIGN COLLECTOR


குளக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அப்போது சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, இஎப்ஐ தொண்டு நிறுவன நிர்வாகி அருண் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்