Skip to main content

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குத் தேசிய தரச்சான்று வழங்குவது குறித்து மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Chidambaram Government Hospital to receive National Certification

 

சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு தேசிய சுகாதார திட்ட தரச்சான்று தருவது தொடர்பாக டெல்லியில் இருந்து மத்திய அரசு மருத்துவ குழுவினர் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ந்தேதி வரை மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் மருத்துவர்கள் ஸ்ரீநாத் ரெட்டி, ஸ்ரீதர் ராவ், சரிதா சக்சேனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இவர்கள் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அசோக் பாஸ்கரிடம் மருத்துவமனையின் சுகாதாரம், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் இந்த குழுவினர் மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு செய்து, டெல்லியில் ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பார்கள் பின்னர் தேசிய தரச்சான்றிதழ் மத்திய அரசு மருத்துவ குழுவினர் வழங்குவார்கள். இதன் பிறகு மத்திய அரசு வழங்கும் உதவிகள் அனைத்தும் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.  இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் மருத்துவர்கள் சரவணகுமார், கிரிதரன், பரிமேலழகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

 

தற்போது சிதம்பரம் அரசு மருத்துவமனை கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள மயிலாடுதுறை, அரியலூர் சிதம்பரம் உட்கோட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் உதவிகள் நேரிடையாக கிடைத்தால் இந்த மருத்துவமனையை நம்பி வரும் அனைத்து ஏழை நோயாளிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.