Skip to main content

சென்னை தடியடி சம்பவத்தைக் கண்டித்து நெல்லையில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமிய அமைப்பினர் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து பாளையங்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்று மேலப்பாளையத்தில் 2500 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

chennai vannarappettai peoples caa police all over districts

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று முன்தினம் (14/02/2020) தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தவ்ஹீத் ஜமாத் மாநில துணைத்தலைவர் சுலைமான் தலைமையில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

chennai vannarappettai peoples caa police all over districts

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

chennai vannarappettai peoples caa police all over districts

இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனையொட்டி பகுதியில் 2500- க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தில் பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.