Skip to main content

சுத்துப் போட்ட ரவுடிகள்; தனி ஆளாய் துணிந்த பெண் காவலர்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

chennai marina woman constable kala brave action
 காவலர்  கலா

 

மெரினா கடற்கரைக்கு கடந்த சனிக்கிழமை மாலை காதல் ஜோடி ஒன்று பைக்கில் வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில்  2 பைக்கில் வந்த 4 பேர் இந்த காதல் ஜோடி வந்த பைக் மீது மோதினர். இதனால் நிலைதடுமாறிய காதல் ஜோடி பைக்குடன் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அந்த ரவுடி கும்பல் காதல் ஜோடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றனர். இந்நிலையில் ரவுடி கும்பலின் அநாகரிக செயல் மற்றும் பாலியல் தொல்லையால் அந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். இவற்றைப் பார்த்து அங்கிருந்த சிலர் ரவுடிகளைத் தட்டி கேட்காமல் அமைதி காத்தனர். இதனை ரவுடிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கலா என்பவர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளார். இதனை கவனித்த ரவுடிகள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும் அந்த பெண் காவலர் தனி நபராக போராடி 4 பேரையும் மடக்கிப் பிடித்தார். பெண் காவலரை ரவுடிகள் 4 பேரும் ஆபாசமாகப் பேசி அவரைத் தாக்க முயன்றனர். இதையடுத்து  கொலை மிரட்டல் விடுத்து விட்டுப் பெண் காவலரின் பிடியில் இருந்து அவர்கள் வந்திருந்த பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

ரவுடிகள்  தப்பிச் சென்ற பைக் பதிவு எண்களுடன் அண்ணா சதுக்கம் போலீசாருக்கு பெண் காவலர் கலா தகவல் அளித்தார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உரிய ஆறுதல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் இந்த ரவுடிகள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தமிழரசன், உதயகுமார், வசந்தகுமார் மற்றும் சோமசுந்தரம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார்  4 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில்  தனி ஒருவராக  போராடி  இளம் பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பெண் காவலர் கலாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.