Skip to main content

காப்பான் பட விழாவில் ரஜினியின் பேச்சு! உன்னிப்பாக கவனிக்கும் திமுக!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

நடிகர் சூர்யா நடிக்கும் காப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சில் அரசியல் ரீதியான கருத்துக்கள் எதிரொலித்தன.  பாஜக அரசின் புதிய தேசிய கொள்கைக்கு எதிராக சமீபத்தில் வாள் சுழற்றியிருந்தார் நடிகர் சூர்யா. இது பல்வேறு தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசியவர்கள், 'புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்துக்களை ரஜினி பேசியிருந்தால் உடனே பிரதமர் மோடிக்கு எட்டியிருக்கும்' என்றனர். இதனை தனது பேச்சில் சுட்டிக்காட்டிய ரஜினி, ‘’நான் பேசினால் மோடிக்கு எட்டியிருக்கும் என்கிறார்கள். ஆனால், சூரியா பேசியதும் எட்டியிருக்கும்‘’என சூர்யாவிற்கான ஒரு முக்கியத்துவத்தை தந்த அவர், தனது பேச்சு மோடிக்கு உடனடியாக தெரிய வரும் என்பதை மறுக்கவில்லை. ரஜினியாகிய நான் எதைப் பேசினாலும் அது உடனடியாக மோடிக்கு தெரியப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தது அவரதுப் பேச்சு !  

 

chennai kaappaan film audio launch actor rajini kandh speech

 

 

மேலும், சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்ட வைரமுத்துவின் தமிழராற்றுபடையின் நூல் வெளியீட்டு விழாவில், தமிழினம் எப்படி இருக்க வேண்டும்? அந்த இனம் எப்படி செயல்பட வேண்டும்? என ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களை காப்பான் பட விழாவில் மேற்கோள்காட்டினார் ரஜினி. ரஜினியின் இந்த பேச்சும் அரசியல் ரீதியாக உற்றுப்பார்க்கப்படுகிறது. தமிழராற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில்  மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் முன்வைத்த கருத்துக்களை மேற்கோள் காட்டாமல் ப.சிதம்பரத்தின் கருத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டி ரஜினி பேசியிருப்பதை திமுக, காங்கிரஸ் தரப்பில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.குறிப்பாக, வைரமுத்துவின் நூல் வெளியிட்டு விழாவை பாராட்ட ரஜினி நினைத்திருந்தால் வைரமுத்துவையும் அவரது நூலில் உள்ள கருத்துக்களையும் மட்டும் அவர் பாராட்டியதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், ப.சிதம்பரத்தின் கருத்துக்களை மேற்கோள் காட்டி எதற்காக வியந்து பாராட்ட வேண்டும்? என அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் இதனை சிலர் எடுத்துச் சென்றிருப்பதாகவும் சொல்கின்றனர் திமுக நிர்வாகிகள்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.