Skip to main content

“உலகில் உள்ள எந்த மருத்துவமனையிலும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்” - ஜெ. மரண அறிக்கை குறித்து ஆறுமுகசாமி பதில்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

“Check in any hospital in the world” J. Arumugasamy's response to the death report

 

கோவை வக்கீல் சங்க அரங்கில் மறைந்த மூத்த வழக்கறிஞர் நடனசபாபதி படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி பங்கேற்றார்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீங்கள் கொடுத்த அறிக்கையை எங்கு பரிசோதிப்பது என சில வழக்கறிஞர்கள் என்னிடம் கேட்கின்றனர். மறையும் போது ஜெயலலிதாவின் வயது 68. அவரின் உயரம் 5 அடி. எடை 100 கிலோ. 

 

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு இருந்த சர்க்கரையின் அளவு 228 மி.கி., ரத்த அழுத்தம் 160 இருந்தது. கிரியாட்டின் 0.82 இருந்தது. இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் கேள்வி. இதை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். 

 

கணினியில் இதுகுறித்து எழுதுங்கள். இதேபோல் ஒருவர் உயிருடன் இருப்பது போல் மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையிலும் கேட்டுப் பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்பதை வைத்து இந்த ஆய்வின் அறிக்கையை நீங்களே பரிசோதனை செய்து கொள்ளலாம்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரிகள் பின்னாலேயே இருந்துள்ளார்கள்” - உதயநிதி ஸ்டாலின்

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

"The enemies were behind" Udayanidhi Stalin

 

“ஜெயலலிதா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார். ஆனால் அவருக்குப் பின்னாலேயே எதிரிகள் இருந்துள்ளனர்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு என இருக்க வேண்டாம். தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் என்ன நிலைமை இருந்தது. அதிகாரக் குவியல். கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தெரியவில்லை என்றார். இறுதியில் அவர்களது எதிரிகள் எல்லாம் அவர்கள் பின்னாலேயே இருந்துள்ளார்கள். இதுதான் அதிகாரப் பரவலுக்குமான அதிகாரக் குவியலுக்குமான வித்தியாசம்” என்றார்.

 

 

Next Story

சுகாதாரத்துறை ஆய்வில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை - தமிழக அரசு பதில்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

'Arumugasamy Commission Report on Health Sector Survey'-Tamil Government Response

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை சுகாதாரத்துறை ஆய்வில் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட ஆணையமானது திமுக ஆட்சியில் இறுதிக்கட்ட பணிகளை முடித்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சைகளை அளிக்க அப்போதைய அரசு இயந்திரம் முன்வராதது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றது.

 

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த அரசின் தலைமை வழக்கறிஞர் சார்பில், 'மறைந்த முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் வைக்கப்பட்டு தற்பொழுது மருத்துவ குறிப்புகளுக்காக சுகாதாரத் துறையின் அறிக்கை ஆய்வில் உள்ளது. ஆய்வறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இனி அறிக்கையின் அடிப்படையில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்தும் அடுத்த வாரம் திங்கட்கிழமை பதில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 27 ஆம் தேதி ஒத்தி வைத்தது நீதிமன்றம்.