Skip to main content

விலாசம் சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Chain stolen from woman in Coimbatore

 

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பூ. இவரது கணவர் ஆனந்தவேல். இவர்கள் கடந்த 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு தங்களது டூவீலரில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அந்த சமயம், குஷ்பூ அணிந்திருந்த தாலி சங்கிலியை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

 

ஆனால், அதற்குள் ஆனந்தவேல் - குஷ்பூ தம்பதி தங்களது இல்லத்தை அடைந்துவிட்டனர். இதையடுத்து, ஆனந்தவேலின் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த மர்ம நபர்களில் ஒருவர் பைக்கில் அமர்ந்திருக்கும் நேரத்தில் மற்றொருவர் அங்கிருந்த குஷ்பூவிடம் சென்று விலாசம் கேட்பதுபோல் நைஸாக பேசியுள்ளார். அதற்கு குஷ்பூ பதிலளிக்க துவங்கிய நிலையில், அவரது கழுத்தில் இருந்த நாலரை சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

 

ஒரு கணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குஷ்பூ, சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அந்த கொள்ளையர்களை விரட்டி விரட்டி பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, பிடிபட்ட நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் கையில் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இதற்கிடையில், பிடிபட்ட நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பதும் கூலித்தொழில் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், டூவீலரில் தப்பிச் சென்ற பீளமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது கோவையில் உள்ள முக்கியப் பகுதியில் நடக்கும் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்களால் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.