Skip to main content

தொடர் செயின் பறிப்பு திருடர்கள் கைது!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

chain robbery - cuddalore district  - police investigation


கடலூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சுபாஷினி. இவர் கடலூரில் நீதிமன்றத்தில் ஊழியராகப் பணி செய்து வருகிறார். கடந்த மே மாதம் 28ஆம் தேதி பணி முடித்து தனது மொபட்டில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுகாசினி கழுத்தில் இருந்த 13 சவரன் தாலிச் செயினைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் சுபாஷினி புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயின் திருடர்களைத் தீவிரமாக தேடிவந்தனர். 
 


மஞ்ச குப்பத்தைச் சேர்ந்தவர் கஜேந்திர பிரபு, இவர் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த மாதம் முப்பதாம் தேதி இரவு வீட்டு வாசலில் நின்றபடியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

நெல்லிக்குப்பம் பொதுப்பணித் துறையில் பணி செய்யும்பெண் ஊழியர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி உட்பட இப்படி பல பெண்களிடம் செயின்களை பறித்த மர்மநபர்கள் இருவர் தொடர்ந்து தங்கள் கைவரிசையைக் காட்டி வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அபினவ் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் செயின் திருடர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர். நேற்று முன்தினம் இரவு கடலூர் பகுதியில் டெல்டா பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் முரண்பாடாக பேசவே அவர்கள் இருவறையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.

 

 


அவர்கள் இருவரும் நெய்வேலி அருகே உள்ள பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்பதும், இவரது நண்பர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டியைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் இணைந்து செயின் பறிப்பு தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தது தெரியவந்தது.

சிவராமன் மீது சென்னை கேளம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் மயிலம், பிரம்மதேசம், கல்பாக்கம், நெய்வேலி, கடம்புலியூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. செல்வமணி மீது சேத்தியாதோப்பு, சிதம்பரம், மீன்சுருட்டி ,கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழிப்பறி வழக்குகள் உள்ளன.

இவர்கள் இருவரும் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் கடலூர் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் இருபதாம் தேதி இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த உடனே மீண்டும் தங்கள் தொழில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். அந்த அடிப்படையில் தான் கடலூர் சுபாஷினி, ஜெயலட்சுமி இருவரிடமும் செயின் பறித்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். 
 

http://onelink.to/nknapp


அவர்களை கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் டெல்டா படை போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 20 சவரன் நகை ஒரு பல்சர் டூ வீலர் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வழிப்பறித் திருடர்கள் திருடிவிட்டு போலீஸிடம் பிடிபட்டு ஜெயிலுக்குச் செல்வதும் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதும் என்பது தொடர் சம்பவங்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.