Skip to main content

“கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை எழுச்சிமிகு விழாவாகக் கொண்டாட வேண்டும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
centenary of the kalaignar should be celebrated as a grand celebration says I. Periyasamy

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள ரவுண்டு ரோடு நாயுடு மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன்தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்,  அமைச்சருமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,  அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, “நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு வெற்றியை தேடித்தரும் அளவிற்கு அயராது உழைத்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாவட்டங்களை இரண்டாக பிரித்தாலும், கட்சி பணி மற்றும் தேர்தல் பணி உட்பட அனைத்து பணிகளிலும் ஒற்றுமையுடன் செயல்படும் திண்டுக்கல் மாவட்டம் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்னவென்றால் வருகின்ற சூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு எழுச்சிமிகு விழாவாக கொண்டாட வேண்டும்” என்றார்.

அதன்பின் கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “வருகிற ஜீன் 4ம் தேதி வரை நமக்கு தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும், ஜீன் 3ம்தேதி நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு உண்டான ஏற்பாடுகளை தமிழக முதல்வர்  ஸ்டாலின்  செய்து வருகிறார். அதற்கான உத்தரவு வந்தவுடன் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள திமுகவினர் எழுச்சிமிகு விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடவேண்டும். மத்தியில் இந்திய கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்திற்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் கிடைக்கும். அதோடு வரலாறு காணாத அளவிற்கு நலத்திட்டபணிகள் நடைபெறும் என்று கூறினார்.

centenary of the kalaignar should be celebrated as a grand celebration says I. Periyasamy

கூட்டத்தில் இறுதியாக பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “ஜீன் 3-ம் தேதி வருகின்ற முத்தமிழ் அறிஞரும் திராவிட இயக்கத்தின் ஆணிவேருமான டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு எழுச்சிமிகு விழாவாக திமுகவினர் கொண்டாடவேண்டும். தலைமை கட்சியால்அறிவிக்கப்படும் போராட்டமாக இருந்தாலும் சரி, பிறந்தநாள் விழாவாக இருந்தாலும் சரி, அதை யார் சிறப்பாக செய்கிறார்களோ அவர்கள் தான்கட்சியில் நிலைத்திருக்க முடியும். வருங்காலத்தில் இளைஞர்கள் கட்சிப்பணி ஆற்றும் அளவிற்கு அவர்கள் பணிகளை மூத்த நிர்வாகிகள் ஒதுக்கிதர வேண்டும் என்றதோடு நாம் கடந்த காலத்தில் எப்படி கட்சிக்கு  வந்தோம்.

இப்போது நாம கட்சியில் எந்த நிலையில் உள்ளோம். கட்சியால் நாம்அடைந்த உயர்நிலையை ஒவ்வொரு நிர்வாகிகளும் உணர்ந்தால் நமக்குள் எந்தவொரு கருத்து வேறுபாடும் இருக்காது. ஒற்றுமை உணர்வு தான் ஏற்படும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்னையும் வளரும். கட்சி பணியாற்றாமல் இருக்கும் ஒருவரை கட்சி பதவியில் அமரவைத்தால் அவரால் கட்சிக்கு எந்தபயனும் கிடையாது. உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சி பதவிகள் கொடுத்தால் கட்சி வளருவதோடு நீண்ட காலத்திற்கு கட்சி நிலைத்திருக்கும் நிலைமை உருவாகும் என்றதோடு நாம் அனைவரும் கலைஞர் வழியில் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நடந்து ஒற்றுமையுடன் கட்சி பணியாற்றினால் தான்நாம் வரும் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற  அமைச்சர் ஐ.பெரியசாமி!  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin
கோப்புப்படம்

கடந்த 20ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  முதல்நாள் கூட்டத்தொடர் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து  நேற்று  சட்டமன்ற கூட்டத்தொடரில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியின் மானிய  கோரிக்கையைச் சமர்ப்பித்தார். அதுபோல் மதியம் சமூக நலத்துறை அமைச்சர்  கீதாஜீவன் தனது துறை சார்ந்த மானிய கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.  

அதைத் தொடர்ந்து இன்று 3வது நாளான ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமியின் மானிய கோரிக்கை சமர்பிப்பதை யொட்டி கிரீன் சாலையில் உள்ள ரோஜா இல்லத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான  ஐ.பெரியசாமியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாநகர பகுதி  செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூர்கழக நிர்வாகிகள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே அமைச்சர் வீட்டிற்கு மாலைகள் சால்வைகளுடன் வந்தனர். இப்படி அமைச்சரை  வாழ்த்த வந்த கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் இல்லத்தில் காலை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin

அதன்பின் சரியாக 8.15 மணிக்க  அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு  கூடியிருந்த கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லாம் மாலை, சால்வைகளை கொடுத்து வாழ்த்து பெற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மானிய  கோரிக்கைச் சம்மந்தமாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நடப்பு ஆண்டில் தனது துறையில் நடைபெற்ற திட்டப்பணிகளையும், அடுத்த ஆண்டு வரக்கூடிய திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில்  தனது மானிய கோரிக்கை மூலம் சமர்ப்பிக்க இருக்கிறார். 

Next Story

“அரசின் சாதனை திட்டங்களை சொன்னாலே  இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறலாம்” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
You can get a huge victory in  by-elections if you tell the govt achievements says Minister I. Periyasamy

ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் திண்டுக்கல் மாநகரில்  உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது இல்லத்தில் நேரில்  சந்தித்து தங்களின் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கான கோரிக்கை மனு மற்றும்  கிராமங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை  மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர். 

அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்ட  தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து  விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து களப்பணி ஆற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்கள் பணியாற்றக்கூடிய  பகுதிகள் குறித்து கேட்டறிந்ததோடு வரலாறு காணாத வெற்றியை பெறும்  அளவிற்கு ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சார பணியில்  ஈடுபட வேண்டும் எனக் கூறினார்.   

அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “தமிழகத்தில்  40க்கு40 பாராளுமன்ற தொகுதியில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் அனைத்து  கிராமங்களும் தன்னிறைவு பெற்று வருகின்றன. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை  மூலம் அனைத்து கிராமங்களும் சாலை வசதி, குடிதண்ணீர், தெருவிளக்கு வசதி  நூறு சதவிகிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட தார்ச்சாலைகள் மூலம்  லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று தங்கள் விளை பொருட்களை  அருகில் உள்ள நகரங்களுக்கு சிரமமின்றி எடுத்துச் சென்று பயன்பெற்று  வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழகம் முதல்வரின் சாதனை  திட்டங்களையும், மாணவர்கள் மற்றும் ஆதரவற்றோர் மற்றும் பெண்களின் நலனுக்காக அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் சென்று  எடுத்துரைத்தாலே எளிதாக மாபெரும் வெற்றி பெறலாம்” என்று கூறினார்!