Skip to main content

தந்தை- மகன் மரண வழக்கு- சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

cbi investigation thoothukudi sathankulam issues madurai high court branch

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., காவலர் ஆகிய மூவரை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

நீதிமன்ற உத்தரவையடுத்து, தூத்துக்குடி ஏ.எஸ்.பி. குமார் மற்றும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகிய மூவரும் இன்று (30/06/2020) காலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர். 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி, 'தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பிரேதப் பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையில் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. முதல் நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. 'நீதி கிடைக்கும் என ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகின்றனர்; எனவே ஒரு நொடிகூட வீணாகக்கூடாது'. சி.பி.ஐ. உடனடியாக வழக்கு விசாரணையைக் கையில் எடுக்க இயலுமா? சி.பி.ஐ. விசாரிக்கும் வரை நெல்லை சி.பி.சி.ஐ.டி. உடனடியாக வழக்கு விசாரணையைக் கையில் எடுக்க இயலுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இன்று (30/06/2020) மதியம் 12.00 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

 

மேலும் மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல் அவமதித்தது அதிர்ச்சியளிக்கிறது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இதனிடையே மன அழுத்தத்தால் மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் தவறாக நடத்துக்கொண்டுள்ளனர் எனத் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசிய ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., காவலர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணை தொடரும். நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., காவலர் நான்கு வாரத்தில் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 

பல அனுமதிகளைப் பெற்று சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் முன் தடயங்கள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அச்சத்துடன் சாட்சியமளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தந்தை, மகன் மரண வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கும் முன் நெல்லை மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இன்றே கையில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.